தேன்கனிகோட்டை அருகே தக்காளி தோட்டத்தை முற்றிலும் அழித்த காட்டு யானைகள்.

 தேன்கனிகோட்டை அருகே தக்காளி தோட்டத்தை முற்றிலும் அழித்த காட்டு யானைகள்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை பேரூராட்சிக்கு சேர்ந்த லக்கசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சிக்கபுட்டன் மகன் வெங்கடேஷ் என்கிற தம்மையா, விவசாயி, இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இரண்டு ஏக்கர் நிலத்தில் தக்காளி பயிரிட்டிருந்தார், விடியர் காலையில் இவருடைய தோட்டத்திற்க்கு காட்டியானைகள் புகுந்து முற்றிலும் தக்காளி  தோட்டத்தில் புகுந்து நாசம் செய்து சென்றுள்ளது.

வெங்கடேஷ் காலை தோட்டத்தை பராமரிக்க சென்று பார்த்தபோது தோட்டம் முழுவதும், தென்னஞ்செடிகள், நாசம் செய்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைத்து செய்வதறியாது , வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது, சம்பவ இடத்திற்க்கு வந்த வனத்துறையினர், சேதங்களை பார்வையிட்டு உரிய இழப்பீடு பெற்று தருவதாக கூறி சென்றனர்.

விவசாயி வெங்கடேஷ் கூறியதாவது, விவசாய நிலங்களுக்குள் வரும் காட்டுயானைகளையும் , காட்டு பன்றிகளையும், தடுக்கும் வகையில் அரசாங்கம் வரையரு செய்ய வேண்டும், இதே நிலை நீடித்தால் விவசாயம் என்பது கேள்வி குறியாகிவிடும், மேலும் எனக்கு ஏற்ப்பட்டுள்ள பாதிப்பிற்க்கு உரிய இழப்பீடு அரசாங்கம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.