2023-24 கல்வி ஆண்டில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு....!

2023-24 கல்வி ஆண்டில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு....!

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. தற்போது இதன் கீழ் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை

தமிழகத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மை அல்லாத  தனியார் பள்ளிகள் மற்றும் மானியம் பெறாத தனியார் பள்ளிகளில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கென 25% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

மேலும் இது தொடர்பான அறிவிப்பில், தமிழகத்தில் அடுத்த கல்வி ஆண்டில் (2023-24) கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வருகிற மார்ச் 20ம் தேதி முதல் ஏப்ரல் 20ம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விரிவான தகவல்களை அறிய பள்ளி கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்