வாலாஜாபேட்டையில் *54 ஆம் ஆண்டு* தொடக்க விழா பொதுக் கூட்டத்தில் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நட்சத்திர பேச்சாளர் நடிகை *கௌதமி*
அஇஅதிமுக கழக அரசின் சாதனைகளை விளக்கி துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கழக செயலாளர் S.M.சுகுமார் தலைமை தாங்கினார். வாலாஜா நகர கழகச் செயலாளர் மோகன் முன்னிலை வகித்தார் முரளி,சுரேஷ், கவுன்சிலர்கள்
மாவட்ட அம்மா பேரவை செயலாளர் நாராயணன் ஆகியோர் வரவேற்றனர், இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் திரைப்பட நடிகை கௌதமி அவர்கள் கலந்து கொண்டு வியாபாரப் பெருமக்கள் வணிகர்கள், தொழிலாளர்கள் பொதுமக்கள் ஆகியோரிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி வரும் 2026-ல் நடைபெறும் சட்டமன்ற பொது தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களித்து மாபெரும் வெற்றியை வழங்குமாறு பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்தார் மேலும்
நாம் தமிழர் கட்சியில் இருந்து தம்மை விலக்கிக் கொண்டு அ.தி.மு.கவில் இணைந்த முக்கிய நிர்வாகிகள்.. நாம் தமிழர் கட்சியின் மாநில மருத்துவர் அணி செயலாளர் ஐசக் தலைமையில் மேல்விஷாரம் நகர முன்னாள் தலைவர் ஜான் பாஷா ஆற்காடு மேற்கு ஒன்றிய பொருளாளர் ஹேமச்சந்திரன் ஆற்காடு மேற்கு ஒன்றிய மகளிர் பாசறை சரண்யா சரவணன் ஆற்காடு மேற்கு ஒன்றியம் இளைஞர் பாசறை தீனதயாளன் வாலாஜா மேற்கு ஒன்றியம் பொருளாளர் சோழன் மேலும் 200க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சி அடிப்படை உறுப்பினர்கள் அக்கட்சியிலிருந்து விலகி அகில இந்திய அதிமுகவில் இணைந்தனர்
அப்பொழுது நினைவு பரிசாக இதை வழங்கினர்.இதில் ஏராளமான நகர ஒன்றிய மாவட்ட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
