உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக காலை சிற்றுண்டி வழங்கும் ஆசிரியர்

 உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக  காலை சிற்றுண்டி வழங்கும் ஆசிரியர்

ஆண்ட அரசும், இன்றைய அரசும் மக்களுக்கு பயன் தரக்கூடிய திட்டங்களை தேர்தல் (வாக்குகளுக்கு) வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த பின் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் போவது இன்றைய அரசியல் கட்சிகளுக்கு வாடிக்கையாக இருக்கும் இன்றைய சூழலில்  அரசே 1 முதல் 5 ஆம் வகுப்புவரை மட்டுமே  காலை சிற்றுண்டி தர தடுமாறி கொண்டிருக்கும் அரசுக்கு நிகராக ஒரு தனிமனிதன் கடந்த ஜூன் 2022 முதல் இன்றைதேதிவரை தன் சொந்த பணத்தில் முகம்சுழியாமல்  6 முதல் 10 ஆம் வகுப்பு வரை மதிய உணவளித்து அறம் காத்து அகம் மகிழ்கறார் என்றால்  அது வேறு யாருமல்ல நம் குரூப்பில் உள்ள தோழர் ராமமூர்த்தி என்கிற நம் "வாரா" அவர்கள் தான். மென்மேலும் தங்கள் அறப்பணிதொடர வானுயர வாராவை வாழ்த்துகிறேன்.

6முதல் 10  ஆம் வகுப்பு வரை காலை சிற்றுண்டியும் வழங்கிவருகிறார் தமிழாசிரியர் வாரா அவர்கள் என்பது அவர் பணி செய்யும் பள்ளி வட்டாரத்தில் கிடைத்த அண்மை செய்தியாகும்.

தமிழக அரசு தற்போது ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு  மட்டும் காலை சிற்றுண்டி  இலவசமாக வழங்கி வருகின்றது. அதேபோன்று ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கின்ற உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் காலை சிற்றுண்டி வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.