ஆண்மை மிக்க ஆளுநர் R. N. ரவியை பாராட்டுவோம்....!

 ஆண்மை மிக்க ஆளுநர் R. N. ரவியை பாராட்டுவோம்....!

பொதுவாக ஆளுநர் உரை என்பது மாநில அரசால் தயாரிக்கப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு பிறகு அச்சிடப்பட்டு சட்டப்பேரவை வாசிக்கப்படுவதாகும்.

இதில் சில வரிகளை சேர்ப்பதற்கும் நீக்குவதற்கும் ஆளுநருக்கு முழு உரிமை உண்டு. இதில் மட்டுமல்ல எந்த ஒரு விஷயத்திலும் தங்களின் தனிப்பட்ட கருத்துக்களை சேர்ப்பதற்கும் தங்களின் விருப்பங்களை தெரிவிப்பதற்கும் ஒவ்வொரு தனி நபருக்கும் உரிமை உள்ளது.

அந்த வகையில் மாநில அரசு தயாரித்து கொடுத்த அறிக்கையில் சில மாற்றங்களை செய்வதில் ஆளுநருக்கு முழு உரிமை உள்ளது. அதன் அடிப்படையில் தான் ஆளுநரும் இவற்றையெல்லாம் நீக்க வேண்டும் இவற்றையெல்லாம் சேர்க்க வேண்டும் என்று ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

உண்மையில் என்ன நடந்தது..6 பாயிண்டுகள்.. ஆளுநர் மாளிகை வட்டார தகவல்.

1. ஆளுநரின் உரையை நீக்குகிறேன் என அவர் அழகாக தமிழில் மேற்கோள் காட்டிய ஔவையாரின் *”வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக் குடி உயரும், குடி உயரக் கோல் உயரும், கோல் உயரக் கோன் உயர்வான்”* என்கிற வரிகளையும், பாரதியாரின் பாழிய பாரத மணித்திரு நாடு என்கிற கவிதை வரிகளையும், நாட்டுமக்களுக்கு ஆளுநர் தமிழில் சொன்ன ஆங்கில புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகளையும் நீக்கியுள்ளனர்.

ஆளுநர் உரையை ஜனவரி 6 அன்று அரசு அனுப்பி வைத்தது. அதில் உள்ள ஆட்சேபகரமான விஷயங்களை ஆளுநர் குறிப்பிட்டு கேட்டு அவைகளை நீக்கச் சொல்லி சொன்னபோது அச்சுக்கு போய்விட்டது நீங்கள் பேசும்போது தவிர்த்து பேசுங்கள் என்று சொல்லியுள்ளனர். (அது ஆவணபூர்வமாக பதிவாகியுள்ளது.) ஆனால் ஆளுநர் சபையில் அதை நீக்கி வாசித்தபோது உடனடியாக சானல்களுக்கு அதை அனுப்பி வைத்தும், ஆளுநர் இருக்கும்போதே ஆளுநர் உரைக்குப்பின் சபை முடித்துவைக்கப்பட வேண்டும் என்கிற சபை மரபை மீறி தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஆளுநர் அவமானப்படுத்தப்பட்டுள்ளார்.  எதை எதை ஆளுநர் ஆட்சேபித்தார் ஏன் என்பதை பார்ப்போம்.

2. ஜனவரி 12ம் தேதி சுவாமி விவேகானந்தரை நினைவுகூரும் இளைஞர் தினம். அந்த தினத்தை குறிப்பிட்டு சேர்த்து பேசியுள்ளார். இது அவை மரபை மீறிய செயல் அல்ல.

ஆளுநர் ஆட்சேபித்த மற்றும் தவிர்க்கப்பட்ட பகுதிகள் அரசாங்கத்தைப் கண்டபடி பெரிதும் புகழ்ந்த பகுதிகள். நடைமுறை வேறாக இருந்ததால் ஆட்சேபித்தார், பேசும்போது தவிர்க்கலாம் என்று சொன்னதால் தவிர்த்தார். 

3. "இந்த அரசாங்கம் வீரம் மற்றும் வீரியம் கொண்ட திராவிட மாடல்  ஆட்சியில் தொடரும்"  இதை ஆளுநர் சொல்ல முடியாது. முதல்வர் அவர் உரையில் பேச வேண்டியது. கொள்கை, செய்யவேண்டியதை மட்டும் ஆளுநர் உரையில் வைப்பார்கள். இதுபோன்ற அதீத புகழ்சிகளை தவிர்ப்பேன் என்று ஆளுநர் சொல்லிவிட்டார்.

4. இந்த மாநிலம் அமைதி மற்றும் அமைதியின் சொர்க்கமாகத் தொடர்கிறது, வன்முறையிலிருந்து விடுபட்டுள்ளது என்று இல்லாத ஒன்றை பதிய வைப்பதை தவிர்த்தார். தினசரி நியூஸ் சேனல்கள், பேப்பர்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை அடுக்காக புகாராக சொல்லும்போது இந்த மாநிலம் அமைதியின் சொர்க்கமாக இருக்கிறது என்பது யதார்த்தம் அல்ல (சமீபத்தில் பொதுகூட்டத்தில் பெண் காவலருக்கு நடந்த பாலியல் சீண்டலில் குற்றவாளிகளை கைது செய்யாமல் பாதுகாத்ததும், பின்னர் எதிர்ப்பு கிளம்பியபின் கைது செய்ததும் நடந்தது)  

5. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் ஏதோ மாநில அரசின் முயற்சியால் மட்டுமே விடுவிக்கப்பட்டதாக உள்ள வரிகளை எப்படி ஏற்க முடியும். அது சர்வதேச பிரச்சினை மத்திய அரசின் தலியீடு இல்லாமல் எப்படி நடக்க முடியும் என்பதால் ஒன்றிய அரசின் முயற்சி என்கிற வார்த்தையை சேர்த்து படித்தது தவறா?

பல இடங்களில் சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் அமைதியின் சொர்க்கமாக மாநிலம் திகழ்கிறது என்கிற வார்த்தைகள் முதல்வர் மற்றும் டிஜிபியை போற்றும் வகையில் இருந்தது. இந்த வார்த்தைகள் ஆளுநரால் தவிர்க்கப்பட்டது.

*தொழிற்முதலீடு குறித்த மிகைப்படுத்தப்பட்ட செய்தி*

"கடந்த 1.5 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களைக் காட்டிலும் அதிக அந்நிய நேரடி முதலீட்டை தமிழகம் ஈர்த்தது" என்பது ஜனவரி 7 ஆம் தேதி ஆளுநர் உரையில் இருந்தது இதை ஆளுநர் சுட்டிக்காட்டி மாற்றச்சொன்னார். அதை அப்படியே இருந்ததால் தவிர்த்தார்.

உண்மை என்ன?  

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தமிழக அரசு ஈர்த்த அந்நிய முதலீடு 2.5 பில்லியன் டாலர்கள் என பெருமையாக பதிவிடப்பட்டுள்ளது. ஆனால் இதே காலக்கட்டத்தில் மகாராஷ்டிரா - 28 பில்லியன் டாலர்கள் மற்றும் கர்நாடகா 25 பில்லியன் டாலர்கள் அந்நிய முதலீட்டை ஈர்த்துள்ளது இதில் பத்தில் ஒருபங்கை ஈர்த்துவிட்டு பெருமையடைவது பிழையான ஒன்று என்பதால் தவிர்த்தார்.

. சட்டசபை உறுப்பினர்கள் ஆளுநரை சுற்றி நின்று உரையை வாசிக்க விடாமல் கோஷமிட்டு கேரோ செய்தனர். இது இதற்கு முன் நடக்காத ஒன்று, ஆளுநர் பேச்சுக்கு எதிராக கேரோ செய்து கோஷம் எழுப்பும் போது சபாநாயகர் தடுக்காமல் அவர்களை வேடிக்கை பார்த்தார்.

6. ஆளுநர் முன்னாள் சபாநாயகர் இருக்கையில் இருக்கும்போது, ஆளுநர் உரையின் தமிழக்க சபாநாயகர் உரைக்குப் பிறகு தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் மற்றும் அமர்வு ஒத்திவைக்கப்பட வேண்டும். ஆனால் சபை மரபை மீறி முதல்வர் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தது சபை விதிகளின்படி இல்லை, அவை மரபை மீறிய செயல்.

சபாநாயகர் சபையின் தலைவராக இருந்தாலும் அரசியலமைப்புச் சட்டத்தின் தலைவராக உள்ள ஆளுநரின் பேச்சை சபைக்குறிப்பிலிருந்து நீக்குவது என்பது சட்ட வல்லுனர்கள் முன் உள்ள தீவிர விவாதப் பொருளாகும். இவ்வாறு ஆளுநர் மாளிகை வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

இதுபோன்ற அதீத புகழ்ச்சிகளை தவிர்ப்பேன் என முன்பே ஆளுநர் கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது. யதார்த்த நிலை வேறாக இருக்கும் போது தமிழகம் அமைதியின் சொர்க்கமாக தொடர்கிறது என இல்லாத ஒன்றை பதிய வைப்பதை ஆளுநர் தவிர்த்ததாக கூறப்படுகிறது. அதேபோல், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் ஏதோ மாநில அரசின் முயற்சியால் மட்டுமேவிடுவிக்கப்பட்டதாக கூறுவதை ஏற்க முடியாது என்பதால் மத்திய அரசின் முயற்சி என்ற வார்த்தையையும் ஆளுநர் சேர்த்துக் கொண்டதாகத் தெரிகிறது.

இந்த சேர்க்கை நீக்கல் தொடர்பாக ஆளுநர் வட்டாரத்திலிருந்து ஏற்கனவே தமிழக அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது இதற்கு பதில் அளித்த அதிகாரிகள் இந்த உரை ஏற்கனவே அச்சிடப்பட்டதாகவும் அதனால் அதை திருத்த முடியாது எனவே தாங்கள் பேசும் போது இவற்றை மாற்றி திருத்தி பேசிக் கொள்ளுங்கள் என்று கூறப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையிலேயே ஆளுநரும் தனது சேர்க்கை நீக்கல்களை செய்துள்ளார். இதில் எந்த தவறும் இல்லை. இந்த நிலையில் வேண்டுமென்றே ஆளுநரை அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக முதலமைச்சரும் அவரின் சட்டமன்ற உறுப்பினர்களும் கூட்டணி கட்சி கைத்தடிகளும் மிகக் கேவலமான முறையில் சட்டமன்றத்தில் நடந்து கொண்டது தமிழக மக்களையே அசிங்கப்பட வைத்துள்ளது.

இதன் மூலம் ஆளுநர் தான் ஒரு ஆண்மை மிக்கவர் என்பதை நிரூபித்துள்ளார். உள்ளதை உள்ளது என்றும் இல்லதை இல்லை என்று சொல்லுவது தான் நடுநிலையாளர்களின் மரபு.

 இதை விட்டுவிட்டு எல்லோரும் தனது கூட்டணி கட்சி கைத்தடிகளை போல் தனக்குத்தான் ஜால்ரா அடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஏதோச்சதிகாரத்தின் உச்சகட்டம். இதைத்தான் முதலமைச்சர் மு. க. ஸ்டாலினும் அவரின் சகாக்களும் செய்துள்ளார்கள். இதை தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல பொதுவான நிலையில் உள்ள அனைத்து மக்களும் வன்மையாக கண்டிக்கின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, 'தமிழ்நாடு சட்டமன்ற விதிகளில் அத்தியாயம் 4ல் குறிப்பிட்டுள்ளபடி, அரசியலமைப்பு சட்டத்தின் 175, 176ன் பிரிவின் படி, அவை கூடியிருக்கும்போது ஆளுநர் உரை நிகழ்த்துகையிலோ, நிகழ்த்துவதற்கு முன்னரோ, பின்னரோ, உறுப்பினர் எவரும் தமது பேச்சினாலோ, வேறு எவ்வகையிலோ தடுக்கவோ, குறுக்கீடு செய்யவோ கூடாது, அவ்வாறு தடங்கலோ அல்லது குறுக்கீடோ செய்வது பேரவையின் ஒழுங்கிற்குப் பெருத்த ஊறு விளைவிப்பதாகக் கருதப்பெற்று அடுத்து நிகழும் கூட்டத்தில் பேரவை தலைவரால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இதனடிப்படையில், நடைபெற்ற சட்டசபை நிகழ்வில், ஆளுநர் உரைக்கு முன்னர் இடையூறு செய்த அனைத்து உறுப்பினர்கள் மீதும், நிகழ்த்திக்கொண்டிருந்த போது இடையூறு செய்த அனைத்து உறுப்பினர்கள் மீதும், நிகழ்த்திய பின்னர் குறுக்கீடு செய்து, தடங்கல் செய்த முதலமைச்சர் ஸ்டாலின் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க சபாநாயகர் முன் வரவேண்டும். அதுவே சட்டம்! அதுவே ஜனநாயகம்! முதலமைச்சர் மீது நடவடிக்கை பாயுமா?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், திமுக அமைச்சர்கள் பலர் அநாகரீகத்தின் உச்சத்திற்கே சென்றுள்ளனர்.  சட்டசபையில் அமைச்சர் பொன்முடியின் யோக்கியதையை உலகமே வேடிக்கை பார்த்து சிரித்த நிலையில்,  மாலை நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்றைய சட்டசபை விவகாரம் குறித்து முதிர்ச்சியற்ற வகையில், சிறுபிள்ளைத்தனமாக, மலிவான விமர்சனங்களை குறிப்பிட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என பாஜக நாராயணன் தெரிவித்துள்ளார்.

பாஜகவைச் சேர்ந்தவர்கள் ஆளுநர் ரவி செய்தது தவறில்லை என்றும் முதல்வர் ஸ்டாலின் செய்ததே தவறு என்றும் கூறி வருகின்றனர். முன்னதாக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பதிவிட்ட ட்விட்டர் பதிவில், ஆளுநரின் உரையை எதிர்த்து ஆளும் திமுகவின் கூட்டணிக் கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளார்களே? உண்மைக்குப் புறம்பானதை ஆளுநர் பேச வேண்டிய அவசியமில்லை. ஆளுநர் அவையில் இருக்கும் போதே அவருக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வருவது ஜனநாயக விரோதம் என்று தெரிவித்திருந்தார்.

அமைதியாக, நாகரீகமாக ஆட்சி செய்ய தெரியாதவர்கள் அநாகரீகத்தின் உச்சத்திற்கு சென்று கொண்டிருப்பது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து இனியாவது நல்லாட்சி நடத்த திட்டமிட வேண்டும். இல்லாவிட்டால் ஆளுநரால் மட்டுமல்ல அப்பாவி மக்களாலும் இந்த ஆட்சி தூக்கி எறியப்படும்.