சானமாவு ஊராட்சி D. கொத்தப் பள்ளி கிராமத்தில் உள்ள ஏரியில் தெப்ப திருவிழா

 சானமாவு ஊராட்சி D. கொத்தப் பள்ளி கிராமத்தில் உள்ள ஏரியில் தெப்ப திருவிழா

சானமாவு ஊராட்சி D. கொத்தப் பள்ளி கிராமத்தில் உள்ள ஏரியில் தெப்ப திருவிழா நடைப்பெற்றது*

கிருஷ்ணகிரி மாவட்டம் சானமாவு ஊராட்சியில் உள்ள                          டீ.கொத்தப்பள்ளி  கிராமம் உள்ளது.

 இக்கிராம மக்கள். பெரும்பாலானோர் விவசாயத்தை நம்பி உள்ளனர் கிராமத்தில் 80 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது இந்த ஏரியானது கடந்த 18 வருடங்களாக அவ்வப்போது பெய்த மழையால் ஏரிக்கு நீர் வராமல் வரண்டு காணப்பட்டது  அதனால் ஏரியை சுற்றி உள்ள கிராமங்களில் விவசாய நிலங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் நீர் வறண்ட நிலையில் காணப்பட்டது இதனால் கிராம மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளானர்கள் இந்நிலையில் இந்த வருடம் பெய்த தொடர் மழையால்  ஏரி நிரம்பியது இதனால் டீ கொத்தப்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் இதனால் இக்கிராம தேவதையான திரௌபதி அம்மனக்குஅலங்காரங்கள் செய்து தெப்பம் கட்டி தெப்பத்தில் அமர்த்தி ஏரியில் தெப்ப தேர் ஊர்வலம் நடத்தினர் கிராம பெண்கள் மாவிளக்கு ஏந்தி சாமிக்குவிசேஷ பூஜைகள் செய்தனர் 

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் செல்வகுமார்   வேப்பனப்பள்ளி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகன் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவைகான ஏராளமான பொதுமக்களும்  வந்திருந்தனர்.

 மேலும்விழா ஏற்பாடுகளை           டி.கொத்தப்பள்ளி கிராம தேவதை கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

B. S. Prakash