பாதி விலையில் டிராக்டர்கள்..... விண்ணப்பிப்பது எப்படி?

பாதி விலையில் டிராக்டர்கள்..... 

விண்ணப்பிப்பது எப்படி?

இந்தியாவில் உள்ள விவசாயிகளின் நலனுக்காகப் பல திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடம் ரூ.6000 வழங்கி வருகிறது.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பெருக்கவும், அவர்களது வசதிகளை மேம்படுத்தவும் அரசு உதவி செய்து வருகிறது. விவசாயத்திற்குத் தேவையான உரம், விதை, மின்சாரங்களுக்கு ஏற்கனவே மானியங்களை அளித்துவருகிறது.

விவசாயத்துக்கு பிரதான தேவையாக டிராக்டர் உள்ளது. போதிய நிதி பின்புலம் இல்லாத விவசாயிகள் டிராக்டரை சொந்தமாக வாங்காமல் ஒவ்வொரு முறையும் வாடகைக்கு எடுத்து நிலத்தை உழுது வருகின்றனர். இப்படியான குறுவிவசாயிகள் டிராக்டர் வாங்க உதவும் வகையில்,  டிராக்டர் யோஜனாத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், விவசாயிகள் டிராக்டர் வாங்க மானியம் வழங்கப்படுகிறது.

  • பிரதான் மந்திரி கிசான் டிராக்டர் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்கும்போது மானிய உதவி வழங்கப்படுகிறது.
  • பிஎம் கிசான் டிராக்டர் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பாதி விலையில் டிராக்டர்கள் கிடைக்கின்றன. டிராக்டருக்கான பாதித் தொகையை மத்திய அரசே வழங்குகிறது.
  • சந்தையில் விற்கும் எந்த டிராக்டர் வாங்கினாலும் இந்த மானியத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • மத்திய அரசு மட்டுமல்லாமல், மாநில அரசுகளும் டிராக்டர் வாங்க மானிய உதவி வழங்குகின்றன.
  • 18 முதல் 60 வயது வரையில் இருக்கும் இந்திய குடிமக்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.
  • மிக முக்கியமாக விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும்.
  • டிராக்டர் வாங்குபவரின் பெயரில் சொந்தமாக விவசாய நிலம் இருக்க வேண்டும்.

  • அதேபோல, இதே காரணத்திற்காக வேறு மானியத் திட்டங்களில் உதவி பெற்றவராக இருக்கக் கூடாது.
  • முக்கியமான நிபந்தனை என்னவென்றால், விண்ணப்பதாரர் கடந்த ஏழு ஆண்டுகளில் இதேபோல டிராக்டர் எதையும் வாங்கியிருக்கக் கூடாது.
  • பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

  • அருகில் உள்ள இ-சேவை மையங்களில் பதிவு செய்துகொள்ளலாம். ஆதார் அட்டை, நில பத்திரம், வாங்கி விபரங்கள் கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம். ஒரு சில மாநிலங்களில் அதற்கென தனி போர்ட்டல்கள் அமைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் இந்தத் திட்டத்தின் மூலம் டிராக்டர்களை வாடகைக்கு எடுக்கும் சிரமம் குறைந்துள்ளதால் விவசாயிகளிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.