ராமநாதபுரம் அருள்மிகு ஸ்ரீ வழிவிடு முருகன் கோயில் 82 -ஆம் ஆண்டு பங்குனி உத்திர பெருவிழா!!!

  ராமநாதபுரம் அருள்மிகு ஸ்ரீ வழிவிடு முருகன் கோயில் 82 -ஆம்  ஆண்டு பங்குனி உத்திர பெருவிழா!

ராமநாதபுரம் மார்ச்-09

ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் அருள்மிகு ஸ்ரீ வழிவிடு முருகன் கோயில் 82-ம் ஆண்டு பங்குனி உத்திரப் பெருவிழா நிகழ்ச்சிகள் இன்று காலை காப்பு கட்டுதல் விழா துவங்கியது முன்னதாக முருகப்பெருமானுக்கு  காப்புக்கட்டு நடைபெற்றது. இதனை அடுத்து கோயிலின் உள்ளே அமைக்கப்பட்ட புதுப்பொழிவுடன் கூடிய கொடிமரத்தில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடி காலை 6.31 மணிக்கு மேல். 6.54 மணிக்குள் கும்பம்லக்கனத்தில்,  அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை,திருமஞ்சன அபிஷேகம்,ரட்ஷா பந்தனம் துவாஜா ரோகனம் பூஜையுடன் கொடி ஏற்றப்பட்டது. 9.3.22ம் தேதி முதல் 18.3.22 வரை பக்தி இசை நிகழ்ச்சி, சண்முக அர்ச்சனை, சொற்பொழிவு, பரதநாட்டிய நிகழ்ச்சி உள்ளிட்டவை சிறப்பாக நடைபெற உள்ளது. 18.3.22, வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு பூக்குளி இறங்கும் வைபவம் விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாட்டினை பரம்பரை தர்மகர்த்தா  ஜெயக்குமார் செய்துள்ளார். இதில் பக்தர்கள்  ஏராளமானோர்  கலந்துகொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு