திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலய தீபத்திருவிழா நாட்களில் 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலய தீபத்திருவிழா நாட்களில் 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி

திருவண்ணாமலை அருணாசல ஆலய தீபத்திருவிழா நாட்களில் 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி  பரணி தீபம், மகா தீபத்திற்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!! 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 10ஆம் தேதி புதன்கிழமை காலை 6.30 மணிக்கு மேல் 7.25 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது 

தொடர்ந்து 7ஆம் நாள் விழாவான 16ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை பஞ்சமூர்த்திகள் தேரோட்டமும், விழாவின்  10ஆம் நாள் விழாவான 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், அன்று மாலை 6 மணி அளவில் அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பல்வேறு துறைகளின் மூலமாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது  கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமை தாங்கினார் 

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் பேசியதாவது:- 

கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி தொற்று பரவலை தடுக்கும் விதமாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் விழாவில் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் பேர் மட்டுமே சமூக இடைவெளியினை பின்பற்றி கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் 

மேலும் விழா நாட்களில் சாமி அபிஷேகம் மற்றும் திருஉலா புறப்பாடு நேரங்கள் தவிர்த்து பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய ஏதுவாக வருகிற 7ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை மற்றும் 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நாள்தோறும் 10 ஆயிரம் பக்தர்கள் காலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் 

19ஆம் தேதியன்று பரணி தீபம் மற்றும் மகா தீபம் நடைபெறுவதை முன்னிட்டு பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை 

தீபத்திருவிழா நாட்களில் பரணி தீபம் மற்றும் மகா தீபம் நடைபெறும் நாளினை தவிர ஆன்லைன் மூலம் கட்டணமில்லாமல் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்ய வரும் 10 ஆயிரம் பக்தர்களில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு 30 சதவீதமும் பிற மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு விகிதாச்சாரத்தின் படி பிரித்து அனுமதிக்கப்படுவார்கள்

தீபத்திருவிழா நிகழ்வுகள் தொலைக்காட்சிகள், உள்ளூர், கேபிள் டி.வி.க்கள் மற்றும் கோவில் நிர்வாகம் மூலம் யூடியூப் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்

பொதுமக்கள் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க இந்த ஆண்டு மேற்கண்ட கட்டுப்பாடுகளுடன் கார்த்திகை தீபத் திருவிழா நடத்தப்படுகிறது

பொதுமக்கள் மேற்காணும் அரசு வழிகாட்டு நெறிமுறைகள், மாவட்ட நிர்வாகம் வழங்கும் அறிவுரைகள் பின்பற்றி கார்த்திகை தீபத்திருவிழா சிறப்பாக நடைபெற கோவில் நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று பேசினார் 

கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் ஊரக வளர்ச்சி பிரதாப், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அசோக்குமார், மாவட்ட வன அலுவலர் அருண்லால், உதவி கலெக்டர் பயிற்சி கட்டா ரவிதேஜா, கலெக்டரின் நேர்முக உதவியாளர்  கணேஷ் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.