திருவண்ணாமலை மாவட்டத்தில் பொழுதுபோக்கு பூங்காக்கள், அணைகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு செப்டம்பர் 26 வரை தடை நீட்டிப்பு!!
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பொழுதுபோக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள், அணைகள் ஆகியவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது வருகிற 26-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது
அதுமட்டுமின்றி பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்து கொள்ள வேண்டும் மாவட்ட நிர்வாகத்தின் இத்தகைய முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று முற்றிலும் இல்லை என்ற நிலையினை அடைய உதவ வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.