1 முதல் 8ஆம் வகுப்பு வறை உடனடியாக பள்ளிகளை திறக்க கோரி முதல்வருக்கு தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கே ஆர் நந்தகுமார் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில்
ஐயா... வணக்கம்....
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்
தமிழகத்தைகொரோனா இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கு தமிழக அரசு எடுத்து வரும் எல்லாவிதமான நடவடிக்கைகளையும்உளப்பூர்வமாக பாராட்டுகிறோம். தமிழக அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாங்கள் உடனிருந்து உதவி புரிந்து வருகிறோம்..
இந்நிலையில் 18 மாதங்களாக மூடி உள்ள பள்ளிகளைதிறப்பதற்கு தாங்கள் மேற்கொண்ட முயற்சி பாராட்டுக்குரியது.
தற்போது 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறந்து எந்தவித நோய் தொற்றும் இல்லாமல் சிறப்பான முறையில் இயங்கி வருவது எங்களுக்கு மேலும் நம்பிக்கையை ஊட்டுகிறது.
பல மாநிலங்களில்ஒன்றாம் வகுப்பு முதல் பள்ளிகள் திறந்து விட்டதால் குழந்தைகள் வீட்டில் இணைய வழியாக கற்க முடியாமல் பெற்றோர்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவரும் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளார்கள்.
ஆரம்பக் கல்வியின் அடித்தளம் தொடக்கக் கல்வியின் தொழுஉரம் என்பதால் உடனடியாக பள்ளிகள் திறப்பு தோன்றியவர்கள் கல்வி தடைபடாமல் கிடைப்பதற்கு ஏதுவாகும். குழந்தைத் தொழிலாளர்களை உருவாவதை தடுப்பதற்கும், குழந்தைத் திருமணங்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றால் பள்ளிக்கூடங்களைஉடனடியாக திறந்து ஆக வேண்டும்.
குழந்தைகள் ஒன்பதாம் வகுப்பு வரை மிகுந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் என்பது மிகச் சிறந்த அறிஞர்களின் கருத்தாக உள்ளதால் ஐக்கிய நாடுகள் சபையும் உளவியலாளர்களும் அறிஞர் பெருமக்களும் உடனடியாக துவக்க பள்ளிகளை தொடங்கிட வேண்டும்.
இல்லை என்றால் மிகுந்த பாதிப்பை உலகிற்கு ஏற்படும் என்பதால் ஒரு தலைமுறையின் கல்வி பாழ்பட்டு விடக் கூடாது என்பதால் உடனடியாக துவக்க பள்ளிகளை திறந்திட வேண்டும் என்பதே அறிஞர் பெருமக்களின் கருத்தாக உள்ளதால் உடனடியாக வரும் 15ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளையும் திறந்திட வேண்டும் என்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் மத்த பணிவோடு வேண்டுகின்றோம்.
எங்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஆசிரியர் அல்லாத பிற ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு ஊசியைப் போட்டுக் கொண்டு உள்ளார்கள்.
அரசின் வழிகாட்டுதல் அனைத்தும் பின்பற்றி வருகின்றோம். எனவே எக்காலத்திலும் பிள்ளைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் ஒவ்வொரு பிள்ளையையும் தாயாக இருந்து எங்கள் பள்ளி ஆசிரியர்கள் மற்ற ஊழியர்கள் உடனிருந்து பாதுகாப்பார்கள் என்கிற உறுதி மொழியோடு உடனடியாக அனைத்து வகை பள்ளிகளையும் திறப்பதற்கு ஆணையிடுங்கள் என்று அன்போடு வேண்டுகின்றோம்.
நன்றியுடன் தங்கள் உண்மையுள்ள.
.கே. ஆர்.நந்தகுமார் மாநில பொதுச்செயலாளர்.நாள்..04.09.2021.