ஏவி. எம். எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 75-வது சுதந்திர தின விழா
ராமநாதபுரம் ஆகஸ்ட்-15
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் ஏவி. எம். எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 75-வது சுதந்திர தின விழா ஆயிரவைசிய மகாஜன சங்க தலைவர் அரிமா மோகன் தலைமையில் கொண்டாடப்பட்டது. துணை முதல்வர் சாந்தி வரவேற்றார் தேசியக்கொடியை சிறப்பு அழைப்பாளர் எவரெஸ்ட் ஜுவல்லரி சேர்மன் N.A. வாசுதேவன் ஏற்றிவைத்து பேசினார். தாளாளர் ஜெயக்குமார் சுதந்திர தின உரை நிகழ்த்தினார். முடிவில் விளையாட்டு ஆசிரியர் பிரசாத் நன்றியுரை கூறினார்.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு