PF பணம்: தெரிந்து்க் கொள்ள வேண்டிய தகவல்கள்!!

PF பணம்: தெரிந்து்க் கொள்ள வேண்டிய தகவல்கள்!!





EPFO அல்லது PF என்றால் மாத சம்பளத்தில் ஒரு பகுதியை எடுத்து அதில் சேர்த்துவிடுவார்கள் என்பதும், அதை அவசர தேவைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்பதே பலரிடையே பரவலான மனப்பான்மையாக இருக்கிறது. ஆனால், EPFO அமைப்பின் முக்கியத்துவம் பற்றியும், அதன் அற்புதமான அம்சங்களைப் பற்றியும் பார்க்கலாம்.




EPFO என்றால் என்ன?


EPFO என்றால் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம. இந்தியாவின் மிகச்சிறந்த சமூகப் பாதுகாப்பு திட்டங்களில் நிச்சயாமக் EPFOவிற்கு முன்னிலை உண்டு. இதுமட்டுமல்ல. பயனாளிகளின் எண்ணிக்கை அடிப்படையிலும், நிதிப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அடிப்படையிலும் உலகிலேயே மிகப்பெரிய சமூகப் பாதுகாப்பு நிறுவனம் EPFOதான்.




​யாருக்கெல்லாம் பயன்?


அமைப்புசார்ந்த துறை ஊழியர்களுக்கு சேமிப்பு மற்றும் சமூக பாதுகாப்பு சேவைகளை EPFO வழங்கி வருகிறது. EPF சட்டத்தின் கீழ் பதிவு செய்த நிறுவனங்கள் மட்டுமே இதில் முதலீடு செய்யமுடியும். ஒவ்வொரு ஊழியரின் அடிப்படை ஊதியத்தில் 12 விழுக்காட்டை EPF கணக்குக்கு மாதா மாதம் செலுத்த வேண்டும்.



​லாபம்


EPF கணக்கில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு வட்டி வழியாக அதிக வருமானம் கிடைக்கிறது. ஒவ்வொரு நிதியாண்டுக்கும் எவ்வளவு வட்டி வழங்கப்படும் என்பதை EPFO அறிவிப்பாக வெளியிடும். உதாரணமாக, இந்த நிதியாண்டுக்கு 8.5 விழுக்காடு வட்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு கூட இவ்வளவு வட்டி கிடைப்பதில்லை.



​வரிச் சலுகை


EPFO சேமிப்புத் திட்டத்திற்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80c கீழ் வரிச் சலுகைகள் கிடைக்கின்றன. இது PF பணத்திற்கான முக்கிய சிறப்பம்சம்.



அவசர பணம்


சம்பந்தப்பட்ட பயனருக்கு கொரோனா போன்ற கொள்ளை நோய் காலத்திலோ, வேலைவாய்ப்பு இழந்த சூழலிலோ பணம் தேவைப்பட்டால் குறிப்பிட்ட பகுதியை PF பணத்தில் இருந்து எடுத்துக்கொள்ளலாம்.



​வாழ்நாள் முழுவதும் பென்சன்


பென்சன் திட்டம் 1995 கீழ் EPFO வாழ்நாள் முழுவதும் பென்சன் வழங்குகிறது.