பத்திரிகையாளர்களுக்கு அரசு அடையாள அட்டை வழங்க தாமதம், விரைவாக வழங்க மனு அளித்த ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நல சங்கம் - தமிழ்நாடு, நிர்வாகிகள்.
ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச்சங்கம் - தமிழ்நாடு, சார்பில் பத்திரிகையாளர்களுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான அரசு அடையாள அட்டை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால், விரைவாக வழங்க கோரி 08.04.2024 அன்று செய்தி துறை இயக்குனர், மருத்துவர் இரா.வைத்திநாதன் இ.ஆ.ப. அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது, மனுவை பெற்றுக்கொண்ட செய்தி துறை இயக்குனர் விரைவாக அரசு அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர்
D.M.தருமராஜா D, Astro, மாநில பொருளாளர்
S.முரளி, மாநில செயற்குழு உறுப்பினர் G.சுரேஷ், தேனை பார்வை பத்திரிகை ஆசிரியர் சரண்குமார், நீதியின் பாதை பத்திரிகை ஆசிரியர் ரஞ்சன்,
உள்ளாட்சி முரசு பத்திரிகை உதவி ஆசிரியர் விவசாயி ஜெயராமன், கம்பீரம் ரிப்போர்ட்டர் பத்திரிகை உதவி ஆசிரியர் சங்கர்,
மக்கள் விருப்பம் பத்திரிகை நிருபர்கள் S.V.கோபிநாத் BA, மோகனசுந்தரம், கே.குமார், தேனை பார்வை நிருபர்கள் P.வெங்கடேசன், N.சதீஸ்குமார், மாரிமுத்து, அரசு, ராமேஸ்வரம், ஞானராஜ், மகேந்திரன், கார்த்திக், ஜாகின்ஷா,
தின சங்கு பத்திரிகை நிருபர் பிரிமியர், பவர் நியூஸ் பத்திரிகை நிருபர் சுரேஷ், விடியும் நேரம் பத்திரிகை நிருபர் கமல் ராஜ், வெற்றி சரித்திரம் பத்திரிகை நிருபர் டென்னிஸ் ராஜா, நீதியின் பாதை பத்திரிகை நிருபர் V.ஜெயராமன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டு மனு அளித்தார்கள்.