கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பதையொட்டி, ராமநாதபுரம் நகர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் கொண்டாட்டம்

 கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பதையொட்டி, ராமநாதபுரம் நகர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் கொண்டாட்டம்

ராமநாதபுரம் மாவட்டம்,கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பதையொட்டி, ராமநாதபுரம் நகர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் மாவட்ட தலைவர் செல்லதுரை அப்துல்லா,மாவட்ட பொறுப்புக் குழு பொருளாளர் ராஜாராம் பாண்டியன் எம் சி ,தலைமையில் ராமநாதபுரம் நகர் தலைவர் கோபி மாவட்ட பொதுச் செயலாளர் மோதிலால் நேரு ஆகியோர் முன்னிலையில் பட்டாசுகள் வெடித்து ஆடிப்பாடி  பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். இதில் வட்டாரத் தலைவர்கள் சேது பாண்டி,காருகுடி சேகர்,அன்வர் நத்தார், உள்ளிட்ட வட்டார தலைவர்கள்.மாவட்டச் செயலாளர் கனிப்கான்,மாவட்ட பொதுச் செயலாளர் சேதுபதி சிறுபான்மை தலைவர் வாணி இப்ராஹிம் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். இந்நிகழ்ச்சியில் ஏராளமான காங்கிரஸ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் அன்னை சோனியா காந்தி வாழ்க, ராகுல் காந்தி வாழ்க, பிரியங்கா காந்தி வாழ்க என்று கோஷமிட்டனர்.            

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி