கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம்

 கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம், ஓசூரில்  நடைபெற்றது. ஓசூர் ரெயில் நிலைய சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு, மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் தலைமை தாங்கினார். ஓசூர் மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான எஸ்.ஏ.சத்யா,  மாவட்ட துணை செயலாளர் பி.முருகன், மாநில இளைஞரணி துணை செயலாளர் பி.எஸ்.சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில், மேற்கு மாவட்ட செயலாளரும், ஓசூர் எம்.எல்.ஏ.வுமான ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.ே லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும், கட்சியினர்  நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று கட்சியினருக்கு பிரகாஷ் எம்.எல்.ஏ. அறிவுறுத்தினார்,

E. V. Palaniyappan