திமுக அரசின் சொத்து வரி , மின் கட்டண உயர்வு பால் விலை உயர்வு விலைவாசி உயர்வு மக்களை வாட்டி வதைத்து வரும் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

 திமுக அரசின் சொத்து வரி , மின் கட்டண உயர்வு பால் விலை உயர்வு விலைவாசி உயர்வு  மக்களை வாட்டி வதைத்து வரும் திமுக அரசை கண்டித்து  கண்டன ஆர்ப்பாட்டம்

 அஇஅதிமுக சார்பில் முதுகுளத்தூர் ஒன்றிய மற்றும் பேரூராட்சி கழகம் சார்பில் திமுக அரசின் சொத்து வரி உயர்வு மின் கட்டண உயர்வு பால் விலை உயர்வு விலைவாசி உயர்வு தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றால் மக்களை வாட்டி வதைத்து வரும் திமுக அரசை கண்டித்து மாவட்ட கழக செயலாளர் எம். ஏ.முனியசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் முதுகுளத்தூர் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது இதில் கழக மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி கண்டன பேருரை ஆற்றினார், முதுகுளத்தூர் பேரூராட்சி செயலாளர் எஸ்ஆர். சங்கர பாண்டியன் முன்னில வகித்தார். இதில் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் நிறைகுலத்தான், கழக அம்மா பேரவை இணைச் செயலாளர் சதன் பிரபாகர் கழக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ஆர்ஜி. ரத்தினம் முன்னாள் மாவட்ட கழக செயலாளர் சுந்தரபாண்டியன், ராமநாதபுரம் நகர் செயலாளர் பால்பாண்டி, கழக விவசாய அணி துணை செயலாளர் கர்ணன், மாவட்ட எம் ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் பெரியசாமி தேவர், 

கமுதி ஒன்றிய கழகச் செயலாளர் எஸ்.பி. காளிமுத்து, கடலாடி ஒன்றிய கழகச் செயலாளர் ஒன்றிய பெருந்தலைவர் எம்.கே.முனியசாமி பாண்டியன், சாயல்குடி ஒன்றிய செயலாளர் ஏஎஸ்பி, அந்தோணி ராஜ், உள்ளிட்ட சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் அதிமுக உடன்பிறப்புகள் திரளாக கலந்து கொண்டு திமுக அரசின்வரி உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். மாவட்ட விவசாய அணி செயலாளர் கர்ணனின் நன்றி உரையுடன் ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி