தேன்கனிக்கோட்டை அருகே சாலையில் சுற்றித் திரிந்த 3 யானைகள்

 தேன்கனிக்கோட்டை அருகே சாலையில் சுற்றித் திரிந்த 3 யானைகள்


கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியிலிருந்து10க்கும் மேற்பட்ட யானைகள் முகnமிட்டுள்ளன.அந்த யானைகள் அடிக்கடி கிராமத்தில் புகுந்தும், சாலையில் சுற்றித்திரிவதால் தேன்கனிக்கோட்டை வனச்சரகர் முருகேசன் தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு  காவலர்கள் குழு அமைத்து தீவிரமாக யானைகளின் நடமாட்டததை கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் மரக்கட்டn வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 3 யானைகள் நேற்று பகல் நேரத்தில் தேன்கனிக்கோட்டை அய்யூர் செல்லும் சாலையில் உள்ள தலசூர் கிராமத்தில் சாலை நின்று கொண்டிருந்தன.

இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அதிர்ச்சிரைந்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாலையில் சுற்றுந்த யானைகள் பார்த்து கிராம மக்கள் அச்சமடைந்தனர் .தகவல் அறிந்த தேன்கோட்டை வனத்துறையினர் விரைந்து வந்து பட்டாசு வெடித்தும், தாரை, தப்பட்டை அடித்தும், அதிக ஒலி எழுப்பியும் யானைகளை அடர்ந்த வனப் பகுதிக்கு விரட்டி யடித்தனர். அதன் பின் வாகன போக்குவரத்து சீரானது யானைகள் அடிக்கடி சாலையில் சுற்றிதிரிவதால்  வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

இதனால் வனத்துறையினர் ஒரு குழு அமைத்து அப்பகுதியில் முகாமிட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

B. S. Prakash

Popular posts
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்
ஈரோடு கிழக்கு; திமுக எடுத்த திடீர் முடிவு..…! அதிர்ச்சியில் மக்கள்...!!
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
TATA எலக்ட்ரானிக்ஸ் எடுத்துள்ள புதிய முடிவு...! கிருஷ்ணகிரி தர்மபுரி மக்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள்...!!
படம்