அப்பாவு பிள்ளை பொன்னம்மாள் நினைவு அறக்கட்டளை சார்பில் ஊக்கத் தொகை வழங்கும் விழா

அப்பாவு பிள்ளை பொன்னம்மாள் நினைவு அறக்கட்டளை சார்பில் ஊக்கத் தொகை வழங்கும் விழா

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை,தளி,கெலமங்கலம்,அஞ்செட்டி,ஆகிய பகுதிகளில் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளில் முதல் மதிப்பெண் பெற்ற 100 மாணவ மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கும் விழா *அப்பாவு பிள்ளை பொன்னம்மாள்*நினைவு அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது,

இவ்விழாவிற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் K.A.மனோகரன் தலைமை வகித்தார், 

இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் அப்துர் ரஹ்மான் வரவேற்புரை ஆற்றினார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவர் திரு செல்வபெருந்தகை சிறப்புரை ஆற்றி,தளி சட்டமன்ற உறுப்பினர் T.ராமச்சந்திரன், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் Y.பிரகாஷ் ஆகியோருடன் இணைந்து மாணவ மாணவிகளுக்கு 2500 ஊக்கத் தொகை வழங்கினார்,

விழா ஏற்பாடுகளை அப்பாவு பொன்னம்மாள் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் K.A. ஜோதிபிரகாஷ்,   கெலமங்கலம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் கேசவமூர்த்தி  காங்கிரஸ் பிரமுகர் வீரமுனிராஜ்,காங்கிரஸ் மாநில செயலாளர் அன்மர் ஆகியோர் செய்தனர்,

மாணவ,மாணவிகள் தலைமை ஆசிரியர்கள்,ஆசிரிய ஆசிரியைகள்,பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்ட இந்த விழாவில் வந்திருந்த அனைவருக்கும் சுவையான மதிய உணவு வழங்கப்பட்டது.

B. S. Prakash

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் நீக்கம்.
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்