கிருஷ்ணகிரி அருகே மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் பத்தாம் வகுப்பு மாணவனுக்கு கத்திக்குத்து

கிருஷ்ணகிரி அருகே மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் பத்தாம் வகுப்பு மாணவனுக்கு கத்திக்குத்து


கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே பண்ணிஹள்ளி புதூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் கடந்த சனிக்கிழமை அன்று மாணவர்களிடையே மாம்பழம் சாப்பிடும் பொழுது தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று பள்ளியில் சிறப்பு வகுப்பு நடைபெற்றபோது தகராறு தொடர்பான மாணவன் ஒருவன் பள்ளிக்கு வரவில்லை. இதனையடுத்து மற்றொரு மாணவன் தொலைபேசியில் வாய்ஸ் மெசேஜ் மூலமாக மிரட்டல் விடுத்துள்ளார்.



இதனை தொடர்ந்து இன்று தகராறில் சம்பந்தப்பட்ட இரண்டு மாணவர்களும் பள்ளிக்கு வந்த பொழுது இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது அப்பொழுது ஒரு மாணவன் தான் மறைத்து வைத்திருந்த பழம் வெட்டும் கத்தியை எடுத்து மற்றொரு மாணவன் தோள்பட்டையில் பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மாணவனின் தோள்பட்டையில் பலத்த காயமடைந்து ரத்தம் வழிந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக காயமடைந்த மாணவனை மீட்டு காவேரிப்பட்டினம் அரசு சமுதாய உடல்நிலை மையத்திற்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவேரிப்பட்டினம் போலீசார் பன்னிஹள்ளி புதூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர்: மூர்த்தி