பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

 பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை



ராஜஸ்தான் மாநிலத்தில் அறிவித்ததை போல, தமிழகத்திலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்..

கிருஷ்ணகிரியில் நடந்த பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் எம்பி., பங்கேற்று பேசினார். 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்..

 ராஜஸ்தான் மாநிலத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அந்த மாநில முதல்வர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் முதல்வர்களாக இருந்த கருணாநிதி, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி போன்றவர்கள் பழைய ஒய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்தார்கள். ஆனால் செயல்படுத்தவில்லை. தற்போது சட்டமன்ற தேர்தலின் போது கூட முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் 2004க்கு பிறகு வந்தவர்களுக்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார். ஆனால் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பது அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கை ஆகும். எனவே அதை செயல்படுத்த வேண்டும். இந்த சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே அதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் எனவும், 

தமிழகத்தில் பூரண மது விலக்கை எப்போது இந்த அரசு கொண்டு வருவார்கள் என்பதை முதல்வர் அறிவிக்க வேண்டும். அதற்கான செயல் திட்டத்தை கொள்கை ரீதியாக திமுக ஏற்றுள்ளார்கள். எனவே தமிழகத்தில் ஆண்டுக்கு ஆயிரம், 2 ஆயிரம் மதுக்கடைகள் என படிப்படியாக குறைத்து, 4 ஆண்டுகளில் முழுமையாக மது விலக்கை அமல்படுத்திட வேண்டும் என்றும்,  இன்று தமிழகத்தில் நடக்க கூடிய கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், விபத்து போன்ற 76 சதவீத குற்றங்களுக்கு காரணம் மது தான். எனவே மதுக்கடைகளை மூடிட வேண்டும் என்றார் . 

 ஆளுநரும், தமிழக அரசு இணைந்து ஒன்றாக செயல்பட்டால் தான் தமிழகத்தின் வளர்ச்சிக்கு அது உகந்ததாக இருக்கும். தமிழக அரசு என்பது மக்களின் உணர்வாகும். ஜனநாயக முறைப்படி வாக்களித்து தேர்வு செய்து ஆட்சிக்கு வந்தவர்கள். ஆளுநர் அந்த அரசிற்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும். அதே போல அரசும் ஆளுநருக்கு அளிக்க வேண்டிய மரியாதையை கொடுக்க வேண்டும். அப்படி செயல்பட்டால் எந்த பிரச்சினையும் இல்லை. இல்லாவிடடால் தமிழகத்திற்கு பாதகமாகவே இருக்கும். தமிழகத்தில் சட்டமன்றத்தில் எந்த சட்டம் இயற்றினாலும் அது ஆளுநர் மூலமாக தான் மத்தியில் கொண்டு சென்று நடைமுறைப்படுத்த முடியும். மாநில அரசின் உரிமைகளை ஆளுநரோ, மத்திய அரசோ எடுக்க கூடாது.

ஆளுனர் பல்லைக்கழகங்களின் வேந்தர் ஆவார். அவர் துணை வேந்தர்களை அழைத்து பேசி உள்ளார். தற்போது தமிழக சட்டசபையில் துணை வேந்தர்களை தமிழக அரசே தேர்ந்தெடுக்க தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இந்த முறை ஏராளமான மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. எனவே அந்த சட்டத்தை பாமக வரவேற்கிறது என்றார் .   2016ல் மாற்றம், முன்னேற்றம் என்ற முழக்கத்துடன் மக்களை சந்தித்தோம். இப்போது அதை விட 10 மடங்கு அதிக வேகத்துடன் மக்களை சந்திக்க உள்ளோம் என கூறினார் .கூட்டத்தில் பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏ.,   உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர்: மூர்த்தி