கிருஷ்ணகிரி அருகே பெத்தனப்பள்ளிகிராமத்தில் 28-ம்வருட எருதுவிடும் விழாவில்.சீறிப்பாய்ந்த காளைகள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்தனப்பள்ளி கிராமத்தில் 28-ம் வருட எருதுவிடும் விழா நடைபெற்றது.
சூளகிரி, ஓசூர். திருவண்ணாமலை. திருப்பத்தூர். ஜோலார்பேட்டை. கர்நாடகமாநிலம். மற்றும் ஆந்திர மாநிலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட காளைகள் விழாவில் பங்கேற்றன.
விழா குழுவினர் நிர்ணயதிருந்த தூரத்தை குறைவான நேரத்தில் ஓடி கடக்கும் காளைகளுக்கு முதல் பரிசாக ஒரு லட்ச ரூபாயும்.
இரண்டாம்பரிசாக
80- ஆயிரம் ரூபாயும்.மூன்றாம் பரிசாக 70- ஆயிரரூபாய் என 25- பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவில் பங்கேற்றகாளைகள் மக்கள் கூட்டம் மத்தியில் சீறிப்பாய்ந்ததை பல
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர்நாகராஜ். மற்றும் ஊர் பொதுமக்கள்செய்திருந்தனர்.
விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் ஆய்வாளர் முத்தமிழ்ச்செல்வன். தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர்: மூர்த்தி