தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக மாபெரும் இரத்ததான முகாம்
ராமநாதபுரம் பிப்-28
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக 28-02-2022 இன்று மாபெரும் இரத்ததான முகாம் மாவட்டத் தலைவர் பட்டாணி மீரான் தலைமையில் ஆனந்தூர் கிளை சார்பாக ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது!!!
இந்நிகழ்வில் டாக்டர்.முனீஸ்வரி MBBS வட்டார மருத்துவ அலுவலர்R.S.மங்கலம், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஜாஹிர் உசேன், மாவட்ட துணைச் செயலாளர் ஜாவித் அஸ்ஸாம், தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் உபைதுல்லாஹ், ஒன்றிய தலைவர் ஜகுபர் அலி , ஒன்றியச் செயலாளர் வசந்தம் ரகுமான், தேவிபட்டிணம் கிளை து.தலைவர் ரியாஸ் அகமது,ஆனந்தூர் கிளைத் தலைவர் மகாதீர் ரகுமான்துணைத்தலைவர் ஜம்ரி பொருளாளர் யாசின். புதுவலசை கிளை நிர்வாகிகள் மற்றும் தேவிபட்டினம் அத்தியூத்து கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு