அரசு இடத்தை ஆக்கிரமித்து சர்ச்: துணை போன தாசில்தார்; இடித்து அகற்ற ஐகோர்ட் உத்தரவு!

 அரசு இடத்தை ஆக்கிரமித்து சர்ச்: துணை போன தாசில்தார்; இடித்து அகற்ற ஐகோர்ட் உத்தரவு!

சென்னை: தாசில்தாரின் ஆசிர்வாதத்துடன் அரசு நிலத்தை ஆக்கிரமித்து, கிறிஸ்துவ மத போதகர் கட்டிய சர்ச் கட்டடத்தை இடிக்க, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

**காஞ்சிபுரம் மாவட்டம் பென்னலுார் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் தாக்கல் செய்த மனு: **

* ஸ்ரீபெரும்புதுார் தாலுகா, பென்னலுார் கிராமத்தில் உள்ள அரசு நிலம், மயானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

* மயானம் செல்வதற்கான வழியை ஆக்கிரமித்து தேவாலயம் கட்ட, 2004ம் ஆண்டில் முயற்சி நடந்தது.

*  கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், சர்ச் கட்டவில்லை.

* கடந்த 2013ம் ஆண்டில், மீண்டும் சர்ச் கட்ட முயற்சி நடந்தது. 

* உடனடியாக மனு அளிக்கப்பட்டது. கட்டுமான பணிகளை நிறுத்தும்படி அறிவுறுத்தப்பட்டது. 

* ஆனால், இரவு நேரத்தில் கட்டுமானம் நடந்தது. 

* **மாவட்ட நிர்வாகம் தரப்பில் தீவிரமாக தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடவில்லை. **

* மயானம் என வகுக்கப்பட்ட பகுதியை, அப்படியே பராமரிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும். 

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

**கிறிஸ்துவ மத போதகர் தரப்பில்,** 

* 'எட்டு ஆண்டுகளாக சர்ச் இயங்கி வருகிறது. சிறிய அளவில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. 

* இதற்கு, கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. 

* எனவே, சர்ச் நடவடிக்கைகள் தொடர அனுமதிக்க வேண்டும்' என கூறப்பட்டது.

* **மாவட்ட நிர்வாகம் தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு பிளீடர் 'குறிப்பிட்ட சர்வே எண்ணில் உள்ள இடத்தை, மயானமாக பயன்படுத்தவில்லை. கிராம மக்களும், தீவிர எதிர்ப்பு தெரிவிக்கவில்லை' என்றார்.**

**மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு: **

* **ஸ்ரீபெரும்புதுார் தாசில்தார் தாக்கல் செய்த பதில் மனுவை பரிசீலிக்கும் போது, ஆக்கிரமிப்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதாக உள்ளது. **

* **பொது சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய கடமை, அரசு அதிகாரிகளுக்கு உள்ளது. **

* **யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றால், அரசு நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அனுமதிக்கலாமா. **

* **குறிப்பிட்ட சர்வே எண்ணில் உள்ள இடம், மேய்க்கால் புறம்போக்கு என உள்ளது. **

* இதை, மத போதகர் ஆக்கிரமித்து கட்டட அனுமதி பெறாமல் கட்டுமானம் மேற்கொண்டுள்ளார்.

* **ஆக்கிரமிப்புகள் குறித்து அதிகாரிகளின் கவனத்துக்கு வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். **

* **சட்ட விரோத நடவடிக்கையை அனுமதிப்பது கண்டிக்கத்தக்கது. **

* எனவே, மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்தை, நான்கு வாரங்களுக்குள் இடிக்க வேண்டும். 

* வேறு நிலம் இருந்தால், கட்டுமானம் எழுப்ப அனுமதி கேட்டு விண்ணப்பிக்கலாம். 

* **அதிகாரிகளின் மெத்தனம், கடமை தவறியது குறித்து விசாரணை நடத்த, கலெக்டருக்கு உத்தரவிடப்படுகிறது. **

* ஆக்கிரமிப்பு செய்து சட்ட விரோதமாக வழிபாட்டு தலங்கள் கட்டப்பட்டு இருந்தால், கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.