*சாதனையாளர் அப்துல்கலாம் விருது 2021*
டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை,மாநில அமைப்பு சார்பில் தருமபுரி மாவட்டத்தில், தன்னலமில்லாமல் சமூகப் பணி மற்றும் சேவையாற்றி வரும் சமூக ஆர்வலர்களை பாராட்டி அதனை ஊக்குவிக்கும் வகையில், 2021ஆம் ஆண்டிற்கான சாதனையாளர் விருதான அப்துல்கலாம் விருது வழங்கப்பட்டது.
இதில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர், திரு. தகடூர் ந.பிறைசூடன் அவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக *நியூஸ் 18 தமிழ்நாடு சேனலின் முதன்மை நெறியாளர், கவிஞர் திரு.பாலவேல் சக்கரவர்த்தி அவர்கள்* மற்றும் தருமபுரி மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் திரு.செந்தில் அவர்கள் மற்றும் *மதிகோண்பாளையம் காவல் ஆய்வாளர் திரு.அம்மாதுரை அவர்கள்* ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை Dr.அப்துல்கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளையின் நிறுவன தலைவர் டாக்டர் திரு. ஜெயராஜ் இராஜேந்திரன் மற்றும் இவ்வமைப்பின் தருமபுரி மாவட்ட தலைவர் திரு. மார்கண்டேயன், செயலர் திரு. கண்ணன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.