பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் மாபெரும் தூய்மைபணி முகாம்
சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுரையின்படி பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் மாபெரும் தூய்மைபணி முகாம் மூலம் மழைநீர் வடிகால்கள் தூய்மை செய்தல் பணியினை மாவட்ட பிற்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலர் பண்டரிநாதன ஆய்வு மேற்கொண்டார்கள். வார்டு1.3.5.8.10 ஆகிய பகுதியில். ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினார்கள். பேரூராட்சிகளின் உதவி பொறியாளர்அலாவுதீன், செயல் அலுவலர் மு.செ. கணேசன், உதவி பொறியாளர் நடராஜன், இளநிலை உதவியாளர்கள் கணேஷ்குமார், லலிதாம்பிகை, சுகாதார மேற்பார்வையாளர் திரு செந்தில் குமார், மற்றும் பொருத்துனர் சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சீப் ரிப்போட்டர் மா அருள்நேரு