ரூ.500 லஞ்சம்: வி.ஏ.ஓ.,வுக்கு சிறை!
நாமக்கல் மாவட்டம், பாலப்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி சரவணன், 40. இவர், தன் பட்டாவில் சர்வே எண்ணை சேர்க்க, வி.ஏ.ஓ., சதாசிவம், 45, என்பவரிடம் 2005ல் விண்ணப்பித்துள்ளார்.
இதற்காக, 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய சதாசிவத்தை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
அவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
நாமக்கல் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், சதாசிவத்துக்கு மூன்றாண்டு சிறை, 2,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சரவணன் உத்தரவிட்டார்.