கிருஷ்ணாபுரம் கிராமத்தில் 16 -ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா

கிருஷ்ணாபுரம் கிராமத்தில் 16 -ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா

ராமநாதபுரம் ஆகஸ்டு- 31 

ராமநாதபுரம் மாவட்டம்,. காஞ்சிரங்குடி கிருஷ்ணாபுரம் கிராமத்தில் 16 -ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா மாவட்ட கவுன்சிலர் ஜல்லிக்கட்டு வடமாடு எருதுகட்டு பேரவை மாவட்ட தலைவருமான கே. ஆதித்தன் தலைமையில் வடமாடு மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது. இதில் மொத்தம் 14 வட மாடுகள் கலந்து கொண்டன. இந்நிகழ்ச்சியில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பிரமுகர்கள் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தினர்  உள்ளிட்டோர். கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் பல மாவட்டங்களில் இருந்து வருகை தந்த 14 வடமாடுகள்  கலந்து கொண்டன. காவல்துறையினரின் பாதுகாப்பு .ஏற்பாடுகளைசெய்திருந்தனர். மிக அற்புதமாக மாடுபிடி வீரர்களை  மாடுகள் தூக்கி எரிந்தது,  பார்வையாளர்கள் அனைவரையும் பிரமிக்கவைத்தது. முனியசாமி கோடாங்கி அனைவரையும் வரவேற்றார் இதற்கான ஏற்பாட்டினை கிருஷ்ணாபுரம் கிராம பொதுமக்கள், கிருஷ்ணாபுரம் விளையாட்டு குழு அனைத்து மகளிர் மன்றங்கள், ஆகியோர் செய்திருந்தனர். 

நன்றி:-  விவேக் மதுரை மேலூர். 

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A ஜெரினா பானு