ஈரோடு மாவட்ட பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கம் சார்பில் பத்திரிக்கையாளர்களுக்கு அரிசி உட்பட 19 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
ஈரோடு, ஜூன்.9-
ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் குடும்பங்களுக்கு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச் சங்கம் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் விழா 9 ந் தேதி காலை ஈரோடு பெரியார் மன்றத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் ரமேஷ் முன்னிலை வகிக்க சங்கத்தின் செயலாளர் ஜீவாதங்கவேல் தலைமை வகித்து கொரோனா காலத்தில் பத்திரிகையாளர் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியும் அதற்காக உதவ பத்திரிகையாளர் நலச் சங்கம் எடுத்த முயற்ச்சி பற்றியும் பேசினார்.மசாலா பொருட்கள் தயாரிப்பில் தமிழகத்தில் முன்னணி நிறுவனமாக செயல்படும் ஈரோடு சக்தி மசாலா நிறுவனம் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் தலா 25 கிலோ கொண்ட ஒரு சிப்பம் பொன்னி அரிசி மற்றும் மசாலா பொருட்களை கொடுத்து பேருதவி செய்தனர்.
மேலும் உதவும் மனப்பான்மையுடன் சில நல்ல மனிதர்களின் பங்களிப்போடு சங்கத்தின் முயற்ச்சியால் பருப்பு, புளி, கோதுமை என மொத்தம் 19 வகையான உணவு பொருட்களும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக ஈரோடு மாவட்டத்திற்கு புது எஸ்.பி.யாக பதவி ஏற்ற டாக்டர் சசிமோகன் ஐ.பி.எஸ். அவர்கள் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை பத்திரிகையாளர்களுக்கு வழங்கினார் மேலும் அவர் பேசுகையில்,"தவறுகளை சுட்டிக் காட்டவும் எங்கள் கவனத்திற்கு கொண்டு வருவதோடு நல்லது நடப்பவைகளை பத்திரிகைகள் ஊக்குவிக்க வேண்டும்" என்றார். மேலும் அவர்,"தற்போது உள்ள நெருக்கடி கால கட்டத்தில் சக தோழர்களுக்கு உதவும் மனப்பான்மையுடன் ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச் சங்கம் இது போன்ற சிறப்பான செயலை செய்துள்ளதை பாராட்டுகிறேன்.." என்றார்.சென்ற வருடம் இதே போன்று கொரோனா கால ஊரடங்கு நெருக்கடியின் போது பத்திரியாளர்களின் குடும்ப சூழலை அறிந்து சக்தி மசாலா நிறுவனம் இதே போன்று மாவட்டத்தில் பணிபுரியும் அணைத்து பத்திரிகையாளர்களும் கும் தலா 25 கிலோ அரிசி சிப்பம் மற்றும் மசாலா பொருட்களை கொடுத்தனர்.அவற்றை ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச் சங்கம் செய்தியாளர்கள் குடும்பங்களுக்கு வழங்கியது.
இவ் வருடமும் சக்தி மசாலா நிறுவனத்தின் உதவி பொருட்கள் கொடுக்கப்பட்டது.இந் நிகழ்வில், ஈரோடு, சத்தியமங்கலம், புளியம்பட்டி, நம்பியூர், கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானி, பெருந்துறை, சென்னிமலை, அரச்சலூர், சிவகிரி, கொடுமுடி, மொடக்குறிச்சி என மாவட்டம் முழுக்க இருந்து 200 க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் நேரில் வந்து நிவாரண பொருட்களை பெற்றுச் சென்றனர்.
சங்க பொருளாளர் ரவிச்சந்திரன் உதவி பொருட்கள் வழங்கிய சக்தி மசாலா நிறுவனம் உள்ளிட்ட அமைப்புகளுக்கு நன்றி தெரிவித்தார்.
சங்க துணை தலைவர்கள் சுப்பிரமணியம், மூர்த்தி துணை செயலாளர்கள் ராஜா, நவீன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தி.க.சன்முகம், பழனிச்சாமி, மகேந்திரன், விஜய் சாய்,பார்த்திபன், பாஸ்கரன், ஜான்சன், வேலுச்சாமி, முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஊர் ஊருக்கு பத்திரிகையாளர்கள் அமைப்புகள் பல உள்ளது.ஆனால் பத்திரிகையாளர்களின் இன்ப துன்பத்தில் பங்கெடுத்து இது போன்ற நெருக்கடியான கால கட்டத்தில் குடும்ப கஷ்டத்தை போக்கும் வகையில் எவ்வித பாகுபாடும் இல்லாமல் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து பத்திரிகையாளர்களின் குடும்பங்களும் நேரடியாக பயன்பெறும் வகையில் சக்தி மசாலா நிறுவனம் வழங்கிய அரிசி, மசாலா பொருட்கள் மற்றும் 19 வகையான உண்வு பொருட்களை தற்போது ஈரோடு மாவட்ட பத்திரிகையா ளர்கள் நலச் சங்கம் வழங்கியிருக்கி

