1,56,000பேருக்கு ரூபாய் 5 ஆயிரம் நிதி உதவி முதலமைச்சர் அறிவிப்பு....!

1,56,000பேருக்கு ரூபாய் 5 ஆயிரம் நிதி உதவி முதலமைச்சர் அறிவிப்பு....!



 கொரோனா பரவல் காரணமாக தலைநகர் டெல்லியில் கடும் ஊரடங்குகட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. கொரோனாவால் ஒரு பக்கம் மக்கள் மிகுந்த துயரத்துக்கு ஆளாகியுள்ள நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் வாழ்வாதரத்தை சிதைத்து வருகின்றன

இந்நிலையில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது, மக்களின் இழப்புகளில் துணை நிற்க வேண்டும் என்ற எண்ணத்தில் டெல்லி அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. 

அதன்படி அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் இரண்டு மாதங்களுக்கு உணவுப் பொருள்கள் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டெல்லியில் உள்ள அனைத்து ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர்கள் மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு டெல்லி அரசு தலா ரூ .5000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்த நிதி நெருக்கடியில் அவர்களுக்கு இது ஒரு சிறிய உதவியாக இருக்கும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

1,56,000 ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலவச-ரேஷன் திட்டம் தலைநகர் டெல்லியில் 72 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.