*9,10,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த தேர்வும் நடைபெறாது"- பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு*
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 9,10,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த தேர்வும் நடைபெறாது"- பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு - ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பை திரும்ப பெற முதன்மை கல்வி அதிகாரிக்கு உத்தரவு
கொரோனா பரவல் காரணமாக நடப்பு கல்வி ஆண்டு முழுவதும் ஆன்லைனில் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வந்த நிலையில், 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்பட்டன. பின்னர் படிப்படியாக கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பின்னர், 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன.
இந்நிலையில், குறைந்த காலத்தில் பாடங்களை நடத்தி முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டதன் காரணமாக 11ம் வகுப்பு வரையில் மாணவர்கள் பொதுத் தேர்வு இன்றி அனைவரும் தேர்ச்சி பெறுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிகொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதையடுத்து ஆன்லைனில் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வந்த நிலையில், சுமார் 10 மாதங்களுக்குப் பிறகு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்பட்டன.
அதனை தொடர்ந்து சில தினங்களில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. அண்மையில் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குறைந்த காலத்தில் பாடங்களை நடத்தி முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டதன் காரணமாக அவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக முதல்வர் அறிவித்திருந்தார்.
இந்த கல்வியாண்டு முழுவதும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்ட நிலையில், காலாண்டு, அரையாண்டு தேர்வுகளும் நடைபெறாத காரணத்தினால், 10ம் வகுப்பு மாணவர்களை எந்த அடிப்படையில் 11 ம் வகுப்பு அல்லது தொழிற்கல்வியில் சேர்ப்பது என்ற குழப்பம் நீடித்து வந்தது. இந்நிலையில், இன்று பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் பள்ளி அளவில் தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் இது குறித்து பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். அந்த சுற்றறிக்கையில், அனைத்து பள்ளிகளிலும் 9,10,11ம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில், இந்த மாத இறுதிக்குள் பள்ளி அளவில் பொதுத்தேர்வு நடத்தி முடிக்க வேண்டும், அதற்கான மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இந்த மாத இறுதிக்குள் பள்ளி அளவில் பொதுத்தேர்வு நடத்தி முடிக்க வேண்டும், அதற்கான மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்ட அறிவிப்பை திரும்ப பெற முதன்மை கல்வி அதிகாரிக்கு கண்ணப்பன் உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களுக்கு எந்த தேர்வும் நடைபெறாது என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.