தமிழகத்தில் வங்கிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை – அதிகாரிகள் விளக்கம்!!

தமிழகத்தில் வங்கிகளுக்கு கத்தில் வங்கிகளுக்கு மார்ச் மாதம் 27 ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி வரை உள்ள 9 நாட்களில் 7 நாட்கள் விடுமுறை என பரவி வரும் செய்தி தவறானது என வங்கி அதிகாரிகள் விளக்கம் தெரிவித்துள்ளனர்.

வங்கிகளுக்கு விடுமுறை:

தமிழகத்தில் வங்கிகளுக்கு மார்ச் மாதம் மட்டும் 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. வங்கிகள் தனியார்மயக்கமாக்கப்பட உள்ளதாக வெளியிட்ட அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தியதே இந்த தொடர் விடுமுறைக்கு காரணம். தற்போது மீண்டும் மார்ச் மாதம் 27 ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி வரை உள்ள 9 நாட்களில் 7 நாட்கள் விடுமுறை வழங்கப்பட உள்ளதாக செய்தி பரவி வருகிறது.

மார்ச் 27 ஆம் தேதி நான்காவது சனிக்கிழமை, 28 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 29 ஆம் தேதி ஹோலி பண்டிகை, 31 ஆம் தேதி கணக்கு முடிக்க இறுதி நாள், ஏப்ரல் 1 ஆம் தேதி நிதியாண்டில் முதல் நாள், ஏப்ரல் 2 ஆம் தேதி புனித வெள்ளி, ஏப்ரல் 4 ஆம் தேதி ஞாயிறுக்கிழமை எனவே விடுமுறை என செய்தி வந்துள்ளது. இதன் உண்மை தன்மையை தெரிந்து கொள்ள வங்கி அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது வங்கிகள் 7 நாட்கள் விடுமுறை என சமூக வலைத்தளங்களில் செய்தி வந்துள்ளது தவறானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் கூறுகையில், “மார்ச் மாதம் 27, 28 ஆம் தேதி சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. ஆனால் மார்ச் 29 ஹோலி பண்டிகை, தமிழகத்திற்கு விடுமுறை இல்லை வட மாநிலங்களுக்கு மட்டுமே விடுமுறை, மார்ச் 31 ஆம் தேதி நிதியாண்டு முடிவு அன்று விடுமுறை இல்லை.

ஏப்ரல் 1, 2 நிதியாண்டு தொடக்கம் மற்றும் புனித வெள்ளிக்கு விடுமுறை விடப்படும். ஆனால் அதற்கு மறுநாள் ஏப்ரல் 3 ஆம் தேதி சனிக்கிழமை என்றாலும், வங்கிகள் வழக்கம் போல் செயல்படும். இவ்வாறு அவர்கள் விளக்கம் அளித்து வங்கிகள் 7 நாட்கள் விடுமுறை என செய்தி வருவது தவறானது என விளக்கம் அளித்துள்ளனர்.