பொங்கலுக்குப் பின் பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. ஜனவரி 8ஆம் தேதி வரை இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக பள்ளி கல்வி முதன்மை செயலர் தீரஜ்குமார் தலைமையில், அதிகாரிகளின் அவசர ஆலோசனை கூட்டம், சென்னை, தலைமை செயலகத்தில் நடைபெற்றது. அதில் பள்ளிகள் திறப்பது குறித்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பொங்கல் விடுமுறைக்கு பின், பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும், முதல் கட்டமாக, பள்ளிகளை திறக்கலாம் என பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், “பொங்கல் விடுமுறை முடிந்த பின், அரசின் வழிகாட்டு முறைகளை பின்பற்றி, பள்ளிகளை திறப்பது குறித்து, ஜனவரி 8ஆம் தேதி வரை, அனைத்து பள்ளிகளிலும், 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களின் பெற்றோரிடம் கருத்து கேட்க வேண்டும்.
அதில், “பொங்கல் விடுமுறை முடிந்த பின், அரசின் வழிகாட்டு முறைகளை பின்பற்றி, பள்ளிகளை திறப்பது குறித்து, ஜனவரி 8ஆம் தேதி வரை, அனைத்து பள்ளிகளிலும், 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களின் பெற்றோரிடம் கருத்து கேட்க வேண்டும்.