அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று ஏற்பட காரணம் என்ன?

அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று ஏற்பட காரணம் என்ன?



கொரோனா தொற்றுக்கு பல்வேறு நபர்களும் ஆளாகி வரும் நிலையில்,  உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதற்கான காரணம் குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளன..




சென்னையில் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வரும் நிலையில், சென்னையை பல்வேறு மண்டலங்களாகப் பிரித்து ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒவ்வொரு அமைச்சரை பொறுப்பாளராக முதல்வர் பழனிசாமி நியமித்தார். அதனடிப்படையில் அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய 3 மண்டலங்களுக்கும் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.



தனக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு களப்பணியாற்றி வந்த அமைச்சர் கே.பி.அன்பழகன், கடந்த சில நாட்களாக காய்ச்சலில் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து, அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மணப்பாக்கம் மியாட் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.



அமைச்சர் கே.பி.அன்பழகன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டபோதே, நீங்கள் உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். அதனால், எளிதில் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, அந்த பொறுப்பை மறுத்து விடுங்கள் என அவருக்கு வேண்டப்பட்டவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், அதனை அமைச்சர் புறந்தள்ளியதாக தெரிகிறது.



அமைச்சர் கே.பி.அன்பழகன் சில ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 150 கிலோ அளவில் எடை கொண்டவராக இருந்துள்ளார். இதனால், அரசியலில் ஈடுபட்ட அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். இதன் மூலம் அவரது எடை கணிசமாக குறைந்துள்ளது.


இதுபோன்ற அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், ஏற்கனவே உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வருபவர்களுக்கு கொரோனா தொற்று எளிதில் பரவி விடும் இருப்பதாக எச்சரிக்கை விடுத்தும், அதனை மறுத்து களப்பணியாற்றியதால் அவருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.


அவா் பூரண நலம் பெற்று மீண்டும் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று தமிழக முதல்வா் தொடங்கி எதிா்கட்சித் தலவா் மு.க. ஸ்டாலின் வரை பலரும் அவா் குணம் பெற வாழ்த்து  தொிவித்து வருகின்றது.


அந்த வகையில்  அமைச்சா் பூரண நலம் பெற மக்கள் ஆட்சி மனதார வாழ்த்துகி்ன்றது.