பால் முகவர்கள் சங்க ஆலோசனை கூட்டம்

 பால் முகவர்கள் சங்க ஆலோசனை கூட்டம்

ஓசூர், பிப். 17–

கிருஷ்ணகிரி மாவட்ட பால் முகவர்கள் அசோசியேஷன் அலுவலகம் திறப்பு விழா மற்றும் ஆலோசனை கூட்டம் ஓசூரில் உள்ள ராயக்கோட்டை சாலையில் நேற்று நடந்தது. தலைவர் வாசுதேவன் தலைமை வகித்தார். தளி எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் அலுவலகத்தை திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஓசூர் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துமாரியப்பன் பங்கேற்று, பால்முகவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். அவர் பேசும் போது பால் விநியோகம் ஒரு உன்னதமான தொழில். அரசின் சட்ட திட்டங்களை கடைபிடித்து பொதுமக்களுக்கு தரமான சுத்தமான பாலை விநியோகம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் லகுமையா, பால் முகவர்கள் அசோசியேஷன் துணைத்தலைவர்கள் ஜீவானந்தம், விஜயபாஸ்கர், பொருளாளர் சத்தீஸ், செயலாளர் வேடியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

E. V. Palaniyappan. Reporter 

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்