ஓசூர் எலைட் ரோட்டரி சார்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கண் பரிசோதனைகள் மேற்கொள்ள ஆசிரியர்களுக்கு ஸ்னல்லன் சார்ட் வழங்கப்பட்டது.

 ஓசூர் எலைட் ரோட்டரி சார்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கண் பரிசோதனைகள் மேற்கொள்ள  ஆசிரியர்களுக்கு ஸ்னல்லன் சார்ட் வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ணகிரி மாவட்ட தளி ஒன்றிய துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவத்திற்கான பயிற்சிகள் நடைபெற்றது. இதில் 225 அரசுப்பள்ளிகளை ஆசிரிய ஆசியைகள் கலந்து கொண்டனர். 

இந்த பயிற்சியில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கண் பரிசோதனையை மேற்கொள்ள உதவும் வகையில் ஸ்னல்லன் சார்ட் மற்றும் ஓசூர் எலைட் ரோட்டரி சார்பில் நடத்தப்பட்ட மாணவர்களுக்கான கண் சிகிச்சை பரிசோதனை அட்டைகள் ஆகியவை ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், வட்டாரக் கல்வி அலுவலர்கள் லட்சுமி நாராயணன், பால்ராஜ், டயட் அலுவலர் முனியப்பன், பி.ஆர்.சி கண்காணிப்பாளர் சுதாகர், ஓசூர் எலைட் ரோட்டரி முன்னாள் தலைவர் ராசு, செயலாளர்சங்கர், ரொட்டேரியன்ஸ் நீலமேகம், சண்முகநாதன், காளிமுத்து, பிரகாசம் மற்றும் கொத்தஜீகூர் தொடக்கப்பள்ளி ஆசிரியை காயத்ரி மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

B. S. Prakash 

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் நீக்கம்.
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்