ஒசூர் மாநகராட்சி வார்டு எண்-3ல் 25 இலட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை

 ஒசூர் மாநகராட்சி வார்டு எண்-3ல்   25 இலட்சம் மதிப்பில்   சிமெண்ட் சாலை 

ஒசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண்-3ல்  பேட்ரப்பள்ளி எம்ஜிஆர் நகர், பாரதிநகர் மற்றும் முனீஷ்வர் நகர் பகுதியில்  சுமார் 25 இலட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்படவுள்ள சிமெண்ட் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கு பூமிபூஜை செய்து பணிகளை  மாவட்ட செயலாளர் திரு.ஓய்.பிரகாஷ்MLA அவர்களும் மாநகர மேயருமான எஸ்.ஏ.சத்யாEx.MLA   இனைந்து துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில்  மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், பொறியாளர் பிரபாகர், மண்டலத் தலைவர் அரசனட்டி ரவி, ஒன்றிய செயலாளர் கஜேந்திர மூர்த்தி, கழக தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Hosur Reporter. E..V. Palaniyappan