ஜுவா நகர் பகுதியில் சுமார் 20 இலட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை
ஒசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண்-38ல் ஜுவா நகர் பகுதியில் சுமார் 20 இலட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்படவுள்ள சிமெண்ட் சாலை அமைப்பதற்கு பூமிபூஜை செய்து பணிகளை மாவட்ட செயலாளர் திரு.ஓய்.பிரகாஷ்MLA அவர்களும் மாநகர மேயருமான எஸ்.ஏ.சத்யாEx.MLA இனைந்து துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், பொறியாளர் வெங்கட்ராமணப்பா, மண்டலத் தலைவர் ஜெயபிரகாஷ், கவுன்சிலர்கள் முருகம்மாள் மதன், லட்சுமி யேமந்த்குமார்@கும்மி, மாவட்டத் துணைச் செயலாளர் தனலட்சுமி, வார்டு கழக நிர்வாகிகள் சதீஷ், மூர்த்தி ரெட்டி, ஜோசப், கணேஷ், சூரி, மணி, சரவணன், மகேஸ்வரி, நாகராஜ் கழக தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Hosur Reporter. E.v. Palaniyappan