கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்துஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம் செப்-20
கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், கேஸ் மானியத்தை ரத்து செய்ததை கண்டித்தும்
எஸ்டிபிஐ கட்சி ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் தொகுதி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் நஜிமுதீன் வரவேற்புரையாற்றினார், மாவட்ட தலைவர் ரியாஸ் கான் தலைமை உரையாற்றினார், மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் ஜமீல் கண்டன உரையாற்றினார், மேலும் ஆர்ப்பாட்டத்தில் தொகுதி தலைவர் பேர் முகைதீன் கண்டன கோஷம் எழுப்பினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் விறகு வைத்து அடுப்பு எரித்தும், கேஸ் சிலிண்டரை தூக்கில் தொங்கவிடும் கண்டனத்தை வெளிப்படுத்தினர்.
மேலும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் செயல்வீரர்கள், சமூக ஆர்வலர்கள், பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு