2021 - திமுகவின் கடைசி தேர்தல் - அரசியல் நோக்கர்கள் கருத்து...
வரக்கூடிய தமிழக சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று திமுக நினைக்கிறது. பத்து ஆண்டுகள் எதிர்க்கட்சியில் இருந்துவிட்டதால், இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் திமுக உள்ளது. இந்த முறையும் தோற்றுவிட்டால் திமுக என்ற கட்சி கலகலத்து விடும். இதை திமுக தலைமை நன்கு உணர்ந்திருக்கிறது. இதற்காகவே 360 கோடி ரூபாய் செலவில் தேர்தல் கன்சல்டன்ட்டாக பீகாரை சேர்ந்த பிரசாந்த் கிஷோரின் I-PAC நிறுவனத்தை பணியில் அமர்த்தியுள்ளது.
இதற்கிடையில், "திமுக ஆட்சியை பிடிப்பது என்பது இயலாத காரியம்; ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு, கனவாகவே போய்விடும்" என்று என்கிறார் பாஜக தலைவர் ஹெச்.ராஜா.
திமுகவின் வெற்றி வாய்ப்பு குறித்து நமது அரசியல் விமர்சகர் அண்ணாமலை அவர்களிடம் பேசியபோது, அவர் கூறிய கருத்துக்களில் இருந்து சில முக்கியமான பார்வைகள்.
⏩திமுக-காங்கிரஸ் கூட்டணி திமுகவின் வெற்றி வாய்ப்பை குறைத்து வருகிறது. காங்கிரஸ் என்பது மூழ்கும் கப்பல். பீகார் தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதியில் ஒதுக்கப்பட்டதால், எதிர்க்கட்சிகள் ஆட்சியை இழந்தன. தமிழகத்திலும் அதே நிலை தொடரும். இதனால் காங்கிரஸ் கட்சி கழட்டி விடப்பட்டு பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணியில் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தயாநிதி மாறன் பாமக வுக்கு எதிராக பேசி விட்டதால், திமுக-பாமக கூட்டணி வாய்ப்பு முற்றிலுமாக கை நழுவி போய்விட்டது. எனவே வடமாவட்டங்களில் திமுகவின் வெற்றி வாய்ப்பு வெகுவாக குறைகிறது.
⏩"நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா?", "தாழ்த்தப்பட்டவர்கள் நீதிபதிகளாக பதவி வகிப்பது நாங்கள் போட்ட பிச்சை", "அந்த நாயை தூக்கி வெளியில் போடுடா" போன்ற பல பேச்சுக்களால் தலித் வாக்குகளை திமுக இழந்து நிற்கிறது.
⏩தமிழகத்தில் முன்பு எப்போதும் இருந்திராத அளவுக்கு இந்து ஒற்றுமையும், இந்து விழிப்புணர்வும் இப்போது ஏற்பட்டுள்ளன. தமிழ் கடவுளாம் முருகப் பெருமானையும் கந்தர் சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்திற்கு பின்னணியில் திமுக இருப்பதை இந்து மக்கள் அறிந்து கொண்டார்கள். இதனால், விழிப்புணர்வு பெற்ற இந்துக்களின் வாக்குகளையும் திமுக இழந்துவிட்டது.
⏩எந்த காலத்திலும் திமுகவுக்கு பெண்களின் ஆதரவு இருந்ததில்லை. "இந்து பெண்களை விபச்சாரிகள்" என்று திருமாவளவன் பேசியதற்கு, ஸ்டாலின் வக்காலத்து வாங்கியதால், தாய்க்குலத்தின் ஆதரவை முற்றிலுமாக திமுக இழந்து நிற்கிறது.
⏩நேர்மையும் திறமையும் துடிப்பும் மிக்க இளைஞரான அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களின் வரவு காரணமாக மேற்கு மாவட்டங்களில் பாஜக புதிய எழுச்சியுடன் பீடு நடைபோடுகிறுகிறது. பாஜக அதிமுக கூட்டணி இந்தமுறை மேற்கு மாவட்டங்களை முழுவதுமாக வெற்றி கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
⏩தேவேந்திர குல வேளாளர்கள் பல வருடங்களாக இரண்டு கோரிக்கைகளுக்காக போராடி வருகின்றனர். பாஜகவின் ஆலோசனையின் பேரில், தேவேந்திரகுல வேளாளர்களின் முதல் கோரிக்கையை அதிமுக அரசு ஏற்றுக் கொண்டு விட்டது. இரண்டாவது கோரிக்கையும் அடுத்த சில ஆண்டுகளில் ஏற்றுக்கொள்ளப்படும். தேவேந்திர குல வேளாளர்களின் கணிசமான வாக்குகள் பாஜக அதிமுக கூட்டணிக்கு கிடைக்கிறது. இதனால் தென் மாவட்டங்களில் இந்தக் கூட்டணி மேலும் வலுவடைந்து வருகிறது.
⏩எம்ஜிஆர் என்ற சக்திதான் திமுகவை ஆட்சி பீடத்தில் உட்கார வைத்தது. எம்ஜிஆர் இருந்தவரையில் திமுக எதிர்க்கட்சியாகத்தான் செயல்பட முடிந்தது.
⏩கடந்த பல சட்டமன்ற தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது, இரண்டு முறை மட்டுமே திமுக நூறு சீட்டுகளை கடந்திருக்கிறது. முதலில், எம்ஜிஆர் இறப்பிற்கு பிறகு வந்த தேர்தல். அப்போது அதிமுக; ஜெயலலிதா அணி-ஜானகி அணி என்று இரண்டாக பிரிந்து தேர்தலை சந்தித்தது. அதுமட்டுமல்ல இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டிருந்தது. அடுத்தது, 1996ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல். "ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தமிழகத்தை அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது" என்று ரஜினி வாய்ஸ் வெற்றி தேடித்தந்த தேர்தல்.
⏩ஆர்.கே.நகரில் டிடிவி - அதிமுக - திமுக என்ற மும்முனை போட்டியில், வலுவான சகசக்திகளுடன் மோதும் போது, திமுகவிற்கு டெபாசிட்டே போய்விட்டது.
⏩2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றாலும், அப்போது நடந்த சட்டசபை இடைத்தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. மத்தியில் நாடாளுமன்றத் தொகுதிகளில் வேறுவிதமாக வாக்களித்தாலும், மாநிலத்தில் திமுக என்ற தீய சக்தி ஆட்சிப் பொறுப்பிற்கு வந்துவிடக்கூடாது என்று தமிழக மக்கள் எச்சரிக்கையாகத் தான் வாக்களித்திருக்கிறார்கள்.
அரசியல் விமர்சகர் அண்ணாமலையின் கருத்துக்கள் யதார்த்த நிலையை துல்லியமாக படம் பிடித்துக் காட்டுகின்றன.
"உடல்நிலை காரணமாக ரஜினி போட்டியிலிருந்து விலகுகிறார். ஆன்மீக அரசியலுக்கு ஆதரவு அளிக்கும் ரஜினி ஓட்டுகள் அனைத்தும், பாஜக-அதிமுக கூட்டணிக்கு தான் கிட்டும். மேலும், நாடாளுமன்ற கூட்டணி அப்படியே தொடரும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுக கூட்டணி வலுவாக உள்ளது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இரண்டுமே மக்களின் எதிர்ப்பை சம்பாதித்த கட்சிகள். திமுக என்பது ஒரு ஹிந்து விரோத கட்சி என்று தமிழக மக்கள் உணர்ந்து கொண்டனர். தலித்துகள் வாக்கு பாஜக அதிமுக கூட்டணிக்கு உறுதியாக வந்துவிட்டது. எனவே 2021 சட்டசபைத் தேர்தலில் திமுகவின் கடைசி தேர்தலாக இருக்கும்" என்கிறார் சமூக ஆர்வலர் கிருஷ்ணகுமார்.
- பத்மநாபன் நாகராஜன்