ஐஐடி நுழைவுத்தேர்வு மாணவர்களுக்கு இ-பாஸ் தேவையா? தமிழக அரசு விளக்கம்!!


ஐஐடி நுழைவுத்தேர்வு மாணவர்களுக்கு இ-பாஸ் தேவையா? தமிழக அரசு விளக்கம்!


தமிழகத்தில் ஐஐடி நுழைவுத் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு இ-பாஸ் இருந்தால் தான் அனுமதிக்கப்படுவாரா என்கிற கேள்விக்கு தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் இ-பாஸ் இன்றி எந்த ஒரு வாகனமும் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படாமல் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் வரும் ஜூன் 24ம் தேதி ஐஐடி ஹைதெராபாத் நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது.


 இந்த தேர்வினை எழுத வரும் மாணவர்கள் இ-பாஸ் வைத்திருக்கத் தேவையில்லை என தமிழக அரசு அறிவித்து உள்ளது. மாற்றாக மாணவர்கள் தங்களது தேர்வு நுழைவுச் சீட்டினை காண்பித்தால் அனுமதிக்கப்படுவார்கள் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.




Popular posts
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்
ஈரோடு கிழக்கு; திமுக எடுத்த திடீர் முடிவு..…! அதிர்ச்சியில் மக்கள்...!!
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
TATA எலக்ட்ரானிக்ஸ் எடுத்துள்ள புதிய முடிவு...! கிருஷ்ணகிரி தர்மபுரி மக்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள்...!!
படம்