பள்ளிகள் திட்டமிட்டப்படி ஜூன் 02 ஆம் திறக்கப்படும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு...!

பள்ளிகள் திட்டமிட்டப்படி ஜூன் 02 ஆம் திறக்கப்படும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு...!

தமிழகத்தில் கோடை விடுமுறைகள் முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. வெயில் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகுமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தற்போது இருக்கும் நிலையில் பள்ளிகள் மீண்டும் திறப்பது தள்ளிப்போகுமா அல்லது திட்டமிட்டப்படி ஜூன் 2ஆம் தேதி திறக்ப்படுமா என்பது தான் தற்போது பலரது கேள்வியாக இருந்து வருகிறது.

 தென்மேற்கு பருவ மழை மற்றும் கோடை மழை காரணமாக தமிழகத்தில் தற்போது வெயில் தாக்கம் தணிந்துள்ளது. இதையடுத்து பள்ளிகள் திறப்பு குறித்த நேரத்தில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் பள்ளிகள் திட்டமிட்டப்படி ஜூன் 02 ஆம் திறக்கப்படும் என்று தொடக்க கல்வி இயக்குனர் நரேஷ் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் ஆரம்பம் மற்றும் நடுநிலை பள்ளிகளை திறப்பதற்கு தயராக வேண்டும் எனவும் உத்தரவிடப் பட்டுள்ளது. 

இதனால் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 02 ஆம் தேதி  அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்படும் என்று உறுதியாகி உள்ளது.