கிணறு வெட்டும்போது ஏற்பட்ட விபத்தில் மூன்று தொழிலாளிகள் பரிதாப பலி
*உளுந்தூர்பேட்டை அருகே அருங்குருக்கை கிராம எல்லைப் பகுதியில் கிணறு வெட்டும்போது ஏற்பட்ட விபத்தில் மூன்று தொழிலாளிகள் பரிதாப பலி*
*கிணற்றில் வெடி வைத்த போது உயிரிழப்பு ஏற்பட்டதா அல்லது கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்தார்கள் என்பது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் விசாரணை*
*உயிரிழந்த மூவரும் உளுந்தூர்பேட்டை தாலுகாவை சேர்ந்தவர்கள்*
*நெய்வனை கிராமத்தைச் சேர்ந்த முருகன் - பெரிய குறுக்கை கிராமத்தைச் சேர்ந்த தணிகாசலம் மற்றும் நரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் ஆகியோர் உயிரிழந்தனர்*
*உயிரிழந்தவர்களின் மரணத்திற்கு உண்மையான காரணம் என்ன என்பது தெரியாமல் சடலத்தை எடுக்க விட மாட்டோம் எனக்கூறி உறவினர்கள் போலீஸரிடம் வாக்குவாதம்*
*சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் போலீசார்