இந்த ஆண்டு RTE மாணவர் சேர்க்கை நடத்த மாட்டோம்..... தனியார் பள்ளிகள் திடீர் போர்க்கொடி...!?

 இந்த ஆண்டு RTE  மாணவர் சேர்க்கை  நடத்த மாட்டோம்.....  தனியார் பள்ளிகள் திடீர் போர்க்கொடி...!?

RTE 25% கல்வி கட்டண பாக்கி 2 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளதை இதுவரை வழங்காமல்  3 வது ஆண்டாக வரும் கல்வி ஆண்டில் மாணவர்களை சேர்க்க அரசாணை போட்டுள்ளதாலும்.. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு இதுவரை தொடர் அங்கீகாரம் வழங்காமல் இழுத்தடித்துக் கொண்டுள்ளதாலும் பள்ளி நிர்வாகிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளார்கள்.. உரிய உடனடி  நடவடிக்கை வேண்டி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலை தனியார் பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் புறக்கணிப்பது என்றும் தனியார் பள்ளிகளுக்குரிய கல்வி கட்டண பாக்கி கிடைக்கும் வரை வரும் கல்வி ஆண்டிற்கான 2024-25 RTE 25% மாணவர்களை சேர்க்காமல் அனைவரும் புறக்கணிப்பது என்றும் முடிவு எடுத்திருப்பதாக தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கே. ஆர். நந்தகுமார் பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் சுயநிதி அடிப்படையில் இயங்கி வரும் தனியார் பள்ளிகளுக்கு காலம் காலமாய் வழங்கி வந்த தொடர் அங்கீகாரம் கூட சுமார் 10,000 பள்ளிகளுக்கு இதுவரை வழங்கவில்லை. 

மாவட்ட கல்வி அலுவலர்கள் ஒவ்வொரு பள்ளி நிர்வாகிகளை பல்லாயிரக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டி வாங்கி கோப்புகளை அனுப்பியும் தனியார் பள்ளிகள் இயக்குனர் அலுவலகத்திலேயே வருடக் கணக்கில் நிலுவையில் வைத்துள்ளனர். 

இதனால் தனியார் பள்ளிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளனர். 

சேலம் மாவட்ட கல்வி அலுவலர் ஏன் இதுவரை அங்கீகாரம் பெறவில்லை அங்கீகாரம் பெறவில்லை என்றால் ஒரு லட்சம் அபராதம் ஒரு நாளைக்கு பத்தாயிரம் அபராதம் என்று தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸும் கொடுத்துள்ளார். 

தொடர் அங்கீகாரம் கொடுக்காதது யார் தவறு. நான்கு சான்றுகளை வைத்துக்கொண்டு அங்கீகாரம் வழங்கிய காலமெல்லாம் போய் இன்றைக்கு புதிது புதிதாக சான்றுகளைக் 

கேட்டும் அங்கீகாரம் தர மறுத்தும் காலம் தாழ்த்தி வருவதால் பள்ளி வாகனங்கள் எப்.சி செய்ய முடியாமல், கடன் வாங்க முடியாமல், வாங்கிய கடனுக்கு வட்டியும் தவணையும் கட்ட முடியாமல் தத்தளித்துக் கொண்டுள்ளனர். 

எனவே அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வரும் பழைய பள்ளிகளுக்கு எந்தவித நிர்பந்தமும் நிபந்தனையும் இல்லாமல் உடனடியாக மூன்றாண்டு காலங்களுக்கான தொடர் அங்கீகார ஆணை வழங்கிட வேண்டும். 

அதே போல் RTE அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டத்தில் மாணவர்களை சேர்த்திட்ட வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான கல்வி கட்டண பாக்கி இதுவரை வழங்கவில்லை. 

மேற்கண்ட எமது சங்கத்தின் பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னால் 2022 - 23 ஆம் கல்வி ஆண்டுக்கான ஆர்.டி .இ கல்வி கட்டண பாக்கி  386 கோடி ரூபாய் வழங்குவதாக அரசாணை வெளியீட்டும் இதுவரை வழங்கவில்லை.

கல்வியாண்டின் கடைசி நாட்கள் வந்த பின்னும் இதுவரை கல்வி கட்டண பாக்கி தராததால் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான மாத சம்பளம் தர முடியாமல் பள்ளி நிர்வாகிகள் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளனர். 

பள்ளிகளின் வங்கி கணக்கு எண் மாறவில்லை. வங்கி மாறவில்லை ஐஎஸ்எப்சி கோடு மாறவில்லை பல ஆண்டுகளாக தரக்கூடிய அதே வங்கி கணக்கு எண்ணில் பணத்தை கொடுப்பதில் என்ன சிக்கல் இருக்கிறது. 

எனவே அரசு மற்றும் அதிகாரிகள் மிகவும் கவனக்குறைவாக தனியார் பணிகளை மிகவும் மரியாதை குறைவாக நடத்துவதாக கருதுகிறோம். 

தனியார் பள்ளிகளுக்கு உரிய கல்வி கட்டண பாக்கியை உடனடியாக தர வேண்டும் இல்லையென்றால் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை தனியார் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் அனைவரும் புறக்கணிப்பது என்றும் .....

தனியார் பள்ளிகளுக்குரிய கல்வி கட்டண பாக்கி கிடைக்கும் வரை வரும் கல்வி ஆண்டிற்கான 2024-25 RTE 25% மாணவர்களை சேர்க்காமல் அனைவரும் புறக்கணிப்பது என்றும் முடிவு எடுத்து இருக்கிறோம் என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு பணிகொண்டு தெரிவித்துக் கொள்கிறோம்.

எனவே மரியாதைக்குரிய பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்கள் எமது பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு அனைவருக்கும் உரிய கல்வி கட்டண பாக்கி கிடைக்கவும், தனியார் பள்ளிகளுக்கானதொடர்  அங்கீகார ஆணைகிடைக்கவும் ஆவன செய்ய வேண்டுமாய் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் அன்போடு வேண்டுகிறோம் என்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கே. ஆர். நந்தகுமார் பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.