கெலமங்கலம் வட்டாரத்தில் கலைஞர் ரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த 

வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ்  50% மானியத்தில் இடுபொருட்கள்

வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ்  50% மானியத்தில் இடுபொருட்கள் மற்றும் பண்ணை கருவிகள் வழங்கப்பட்டு வருகிறது

இது குறித்து கெலமங்கலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கலா அவர்கள் கூறியதாவது.

கெலமங்கலம் வட்டாரத்தில் கலைஞர் ரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பண்ணை கருவிகள் தார்பாய்  விசை தெளிப்பான் கை தெளிப்பான் உயிர் உரங்கள் போன்றவை விவசாயிகளுக்கு  மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது எனவே விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார் மேலும் இதனை பெற ஆதார் நகல் மற்றும் நில சிட்டா நகல் போன்ற ஆவனங்களை எடுத்து கொண்டு கெலமங்கல வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் தேன்கனிக்கோட்டை இராயகோட்டை துணை வேளாண்மை விரிவாக்க மையங்கள் அல்லது உதவி வேளாண் அலுவலர்களை அணுகி பயன்படுத்தி கொள்ளுமாறு வேளாண்மை உதவி இயக்குநர் கேட்டு கொண்டார்.

B. S. Prakash