விபத்துக்குள்ளானவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மாவட்ட ஆட்சியர்

 விபத்துக்குள்ளானவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மாவட்ட ஆட்சியர்


எலவனாசூர்கோட்டை அருகே சேலத்தில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்த காரும் இதனைத் பின் தொடர்ந்து மீன் ஏற்றி வந்து கொண்டிருந்த மினி டெம்போவும் ஒன்றை ஒன்று முந்திச்  செல்வதில் திடீரென எதிர்பாராத விதமாக  ஏற்பட்ட விபத்தினால் சாலையோரம் சாலை அகலப்படுத்தும் பணிகளுக்காக தோண்டப்பட்டு இருந்த சாலையோர பள்ளத்தில் குப்புற கவிழ்ந்ததில் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர் அப்போது கள்ளக்குறிச்சியில் இருந்து திருநாவலூர் வட்டார வளர்ச்சி  அலுவலக வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள சென்று கொண்டிருந்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷர்வன்குமார் அவர்கள் உடனடியாக தனது காரை நிறுத்தி ஆம்புலன்ஸ் வரவைத்து விபத்துக்குள்ளானவர்களை ஆம்புலன்ஸ் ஏற்றி  அருகே உள்ள உளுந்தூர்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு அதன் பிறகு அவர் பணியை மேற்கொள்ள அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Kallakakkurichi Reporter. G. Murugan