மத நல்லிணக்கத்தை பேணிக்காக்கும் வகையில் முஸ்லிம்கள் முளைப்பாரி

மத நல்லிணக்கத்தை பேணிக்காக்கும் வகையில் முஸ்லிம்கள் முளைப்பாரி


ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் சின்னக்கடை தெருவில் மத நல்லிணக்கத்தை பேணிக்காக்கும் வகையில் முஸ்லிம்கள் முளைப்பாரி ஊர்வலத்தை வரவேற்றனர்.ஏ.கே. எம். கென்னடி என்ற முகமது நிஷார்,எஸ். அகமது நைனார்,எஸ். சஸ்லான் உள்ளிட்டோரும் புளிக்காரத்தெரு சங்கத் தலைவரும் முன்னாள் அதிமுக நகர் செயலாளருமான அங்குச்சாமி,  கோவில் பூசாரி ஆகியோருக்கு சால்வை மாலைகள் அணிவித்து மகிழ்ந்தனர். ராமநாதபுரம் புளிக்காரத்தெரு அதிமுக முத்துமாரியம்மன் கோவில் முளைக் கொட்டு உற்சவ விழாவை முன்னிட்டு பாரியை கரைப்பதற்கு சின்னக்கடைத்தெருவழியாக ஊர்வலமாக சென்றது .அப்போது சின்னக்கடைவாழ் இஸ்லாமிய பிரமுகர்கள் ஏ. கே .எம்.கென்னடி ( எ) முகமது நிஷார் எஸ். அஹ்மது நைனார் எஸ்.சஸ்லான் மற்றும் புளிக்காரத்தெரு சங்கத் தலைவரும் முன்னாள் அதிமுக நகர் செயளாலருமான அங்குசாமி கோவில் பூசாரி மற்றும் சங்கத்தினர்களுக்கு சால்வை மாலைகள் அணிவித்து மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N.அன்வர் அலி