ஓசூரை சேர்ந்த இருவருக்கு சிறப்பு டாக்டர் பட்டம் : கோயம்புத்தூரில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது.

 ஓசூரை சேர்ந்த இருவருக்கு சிறப்பு டாக்டர் பட்டம் :  கோயம்புத்தூரில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது.



குளோபல்    யூ மன் பீஸ் யுனிவர்சிட்டி மற்றும்   People  ஃபார்ம் ஆப் இந்தியா, பாரத் சேவா சமாஜம் இணைந்து நடத்திய  கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் விழாவில் ஓசூரை சேர்ந்த டாக்டர் தயாள செல்வம் மற்றும் டாக்டர் கதிரவன் ஆகியோருக்கு சிறப்பு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

இதில் தயாள செல்வத்திற்கு சிறந்த சமூக சேவைக்கான டாக்டர் பட்டமும்,  கதிரவன்  அவர்களுக்கு வழக்கறிஞர் பணியில் சிறந்த சேவையாற்றுவதற்காக டாக்டர் பட்டமும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஓய்வுபெற்ற நீதிபதி முருகானந்தம் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சம்பத்குமார் மற்றும் சிறப்பு அழைப்பாளராக டாக்டர். ஜெயா மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி கோயமுத்தூரில் உள்ள சித்ரா  அரங்கத்தில் நடைபெற்றது.

ஓசூர்  செய்தியாளர் :E.V. பழனியப்பன்