டெல்லியில் பெண் காவலர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டன ஆர்ப்பாட்டம்

 டெல்லியில் பெண் காவலர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டன ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் செப்-09

ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் நகர் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு தலைநகர் டெல்லியில் பெண் காவலர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தெற்கு மாவட்டம் சார்பில்  தலைநகர் டெல்லியில் கடந்த வாரம் சபியா என்கிற பெண் காவலர் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், உண்மை குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய கோரியும் 08.9. 2021 அன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முகம்மது அயூப்கான் அவர்கள் தலைமை  ஏற்றார். மாவட்ட செயலாளர் ஆர். ஆரிப்கான், மாவட்ட துணைத்தலைவர் முகமது பஷீர், மாவட்ட துணைச்செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு