பொதுமக்கள் காவல் துறையோடு இணைந்துசேர்வோம் எழுவோம் ரோந்து முறை

 பொதுமக்கள் காவல் துறையோடு இணைந்துசேர்வோம் எழுவோம் ரோந்து முறை

ராணிப்பேட்டை மாவட்டம்ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டம் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது ராணிப்பேட்டை மாவட்டம்  துவக்கப்பட்ட திலிருந்து பொதுமக்களுக்கும் காவல்துறைக்கு மான நல்லுறவை மேம்படுத்தவும் பொதுமக்கள் காவல் துறையோடு இணைந்து சமூக காவலில் ஈடுபட்டு குற்றங்கள் நிகழாத வண்ணம் தடுக்கும் பொருட்டு  பிரத்தியேக ரோந்து அமைப்பு15.01.21 அந்தம் கிராமிய விழிப்புணர்வு குழுக்கள்28.01.21  அன்றும் ரோந்து கண்காணிப்பு மின் அமைப்பு08.07.2020 அன்றும் நாங்கள்உங்களுக்காக28.10.2020 அன்றும் உடலில் அணியும் கேமிரா வசதி உட்பட நவீன மயமாக்கப்பட்ட பிரத்தியேக ரோந்து அமைப்பு கடந்த06.07.21 அன்றும் என பல ரோந்து முறைகள் துவக்கப்பட்டு நடைமுறையில் உள்ளன

 இதன் தொடர்ச்சியாக பொதுமக்களுக்கும்

 காவல்துறைக்கு மான உறவை மேலும் மேம்படுத்தும் விதமாக சேர்வோம் எழுவோம்  ரோந்து முறை04.09.21 காலை 10.30 மணியளவில் ஆற்காடு விபி பேலஸ் மஹாலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் தீபா சத்தியம்  அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது

இந்த நிகழ்ச்சியில் பி முத்துகருப்பன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், ccw துணை காவல் கண்காணிப்பாளர் 

எஸ்.புகழேந்தி கணேசன் மற்றும் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் ,அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ரோந்து முறை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் தீபா சத்தியன் கூறும்போது ராணிப்பேட்டை மாவட்ட அனைத்து காவல் நிலையங்கள் முழுவதும் 55 ஆண்டுகளாக பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் இருந்து காவலர்கள் ரோந்து சென்று வருகின்றனர் 

இந்த ரோந்து முறை மூலம் ரோந்து காவலர்கள் அவர்களின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு நாளைக்கு குறைந்தது பத்து நபர்கள் அவரது நேரடி தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு அவர்களின் இருப்பிடம் குடும்ப விபரங்களை அறிந்து கொள்வதோடு

அவர்களுக்கு ரோந்து முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தொடர்பு எண்கள் அடங்கிய துண்டுப் பிரசுரம் அளித்து அவரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அந்த பகுதிகளில் நடைபெறும் குற்ற சம்பவங்கள், குற்றவாளிகள் குறித்த தகவல்கள் அனைத்து விதமான சமூக பிரச்சனைகள் ஆதரவற்றோர் குறித்த விவரங்கள் இளைஞர்களை பாதிக்கக்கூடிய விடயங்கள்

என அனைத்து விதமான   தகவல்களும் உடனுக்குடன் பெற்று குற்றங்கள் நிகழாத வண்ணம் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் மேலும் இதன்மூலம் பொதுமக்களுக்கும் காவல் துறைக்கும் இணக்கமான சூழலை ஏற்படுத்த ஏதுவாக இருக்கும் என தெரிவித்தார் மேலும் சிறப்பாக செயல்படும் போது காவலர்களுக்கும், சிறந்த தகவல் கொடுக்கும் பொதுமக்களுக்கும், மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டத்தில் பரிசுகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.